மாணவர்கள் பள்ளிக்கு வர பெற்றோர்கள் ஒப்புதல் அவசியமா? மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர்களின் ஒப்புதல் தேவையா என்பதை மாநில பள்ளிக்கல்வித்துறையே முடிவு எடுக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் பரவிய ஓமிக்ரான் தொற்று பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022 – 23ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித்துறை எண்ணிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு மீ்ண்டும் விடுமுறை – காரணம் இதுதான்! விரைவில் அறிவிப்பு!
அதிகரிக்கும் நோய் பாதிப்புகளை குறைக்க மத்திய சுகாதார அமைப்பு மக்களுக்கு பல வகையான அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதன்படி தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் விகிதம் குறைந்து வருகிறது. அதனால் மாநில அரசுகள் மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதனையடுத்து பல மாநிலங்களில் முதல் கட்டமாக மேல்நிலை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று பரவல் முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகளை திறப்பதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர் ஒப்புதல் தேவையா என்பது குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.