பாராலிம்பிக்ஸ்ல் தங்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு ரூ.6 கோடி ரொக்கப் பரிசு – ஹரியானா அரசு அறிவிப்பு!
பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் சுமித் அன்டிலுக்கு ரூ.6 கோடி ரொக்கப் பரிசு வழங்க இருப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
சுமித் அன்டில்:
டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் போட்டிகளத்தில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வரும் இந்திய வீரர்கள், போட்டிகள் துவங்கிய 6 ஆவது நாளான நேற்று (ஆகஸ்ட் 29) இந்தியாவுக்கு 3 பதக்கங்களை பெற்று தந்துள்ளனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 30) 7 ஆவது நாளில் துவங்கியுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியாக மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – கோவை ஆட்சியர் உத்தரவு!
அந்த வகையில் ஈட்டி எறிதல் பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த வீரர் சுமித் ஆன்டில் என்பவர் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் F 64 பிரிவில் சுமார் 68.55 மீட்டர் தூரம் வரை தனது ஈட்டியை எரிந்து இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப்பதக்கத்தை பதிவு செய்துள்ளார். மேலும், ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
TN Job “FB Group” Join Now
பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கதுனியா. இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சுமித் அன்டிலுக்கு ரூ.6 கோடி ரொக்கப் பரிசும், வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு ரூ.4 கோடி ரொக்கப் பரிசும் வழங்க இருப்பதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இவர்கள் இருவருக்கும் அரசு வேலை அளிக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.