‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை மீட்க விடிய விடிய குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபடும் மூர்த்தி – ப்ரோமோ ரிலீஸ்!
அதிகாரியின் சதி திட்டத்தால் புதிய கடையை இழந்து நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு பிரச்சனைக்கான காரணம் புரிய வர, கடையை மீட்பதற்காக அவர்கள் அனைவரும் குடும்பமாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுகின்றவாறு ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தற்போது புதிய கடை பிரச்சனையை மையமாக வைத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் புதிதாக கடை ஒன்றை கட்ட, அந்த கடை சரியான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி அதிகாரிகள் அதற்கு சீல் வைத்து விட்டு செல்கின்றனர். இதற்கான காரணம் தெரியாமல் அனைவரும் குழம்பி நிற்க, கண்ணன் அந்த விஷயத்தை அறிந்து கொள்கிறார்.
TN Job “FB Group” Join Now
பிறகு ஐஸ்வர்யா மூலமாக கடை மூடப்பட்டதற்கான விவரம் கதிருக்கு தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்திற்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கடை சம்பந்தமான விஷயத்தை பற்றி பேசுவதற்காக அலுவலகம் செல்லும் மூர்த்தி அந்த அதிகாரியை பார்த்து சார் நாங்கள் அப்படி என்ன தான் தவறு செய்தோம். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று வருத்தத்துடன் கேட்க, யாரை கேட்டு என் பையன் மீது கை வைத்தீர்கள். இப்படி செய்தால் நான் சும்மா இருப்பேனா.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
முதலில் வெளியே செல்லுங்கள் என்று மிரட்டுகிறார். இப்போது அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் மூர்த்தி மற்றும் ஜீவா இருவரும் அலுவலக வாசலில் உட்கார்ந்து, எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையும் இங்கிருந்து கிளம்பு மாட்டோம் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த விஷயத்தை ஜெகா மூலமாக அறிந்து கொள்ளும் தனம், கை குழந்தையுடன் அங்கு வர கடையை இடிக்கப் போவதாக ஜீவா வருத்தத்துடன் கூறுகிறார். பிறகு மூர்த்தியுடன் இணைந்து தனமும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
தொடர்ந்து கை குழந்தையுடன் உட்கார்ந்திருக்கும் இவர்களை பார்க்கும் மக்கள் ஒரு நியாத்தை சொல்லுங்கள் என்று அந்த அலுவகத்திற்கு முன்னாள் கோஷமிடுகின்றனர். பிறகு இரவு நெருங்க மீனா, கயல் பாப்பா, ஐஸ்வர்யா மற்றும் முல்லை நால்வரும் அங்கு வந்து போராட்டத்தில் குதிக்கின்றனர். இப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் பக்கம் இருக்கும் நியாயத்தை தெரிந்து கொண்டு அந்த அதிகாரி தனது பிடிவாதத்தை கை விடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.