இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக களமிறங்கும் பிரபல நடிகை ஆல்யா மனசா – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடந்த சில வாரங்களாக முல்லை கதிரை சுற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக ஆலியா மானசா நடிக்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்றுகொண்டிருக்கிறது. கதிர் முல்லைக்கு குழந்தை இல்லாத கதையே கடந்த சில வாரங்களாக காட்டப்பட்டு வருகிறது. முல்லைக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்பதால் அதை நினைத்து முல்லை மிகவும் வருத்தப்படுகிறார். முல்லையின் நிலைமையை நினைத்து கதிர் வருத்தப்பட மூர்த்தியால் பணம் ஏற்பாடு செய்யமுடியாமல் இருக்கிறது. அதனால் முல்லை கடவுளை நம்பி கஷ்டமான பரிகாரம் ஒன்றை செய்கிறார்.
ExamsDaily Mobile App Download
அதனால் முல்லைக்கு உடம்பு சரியில்லாமல் போக முல்லை படும் கஷ்டத்தை பார்த்து குடும்பமே வருத்தப்படுகிறது. அதனால் மூர்த்தி கஷ்டப்பட்டு கடன் வாங்கி முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்க முடிவு செய்கிறார். பலரிடம் கடன் கேட்க கடைசியில் அதிக வட்டிக்கு பணம் வாங்கி கொடுக்கிறார். ஆனால் பணம் கிடைத்ததை நினைத்து முல்லை சந்தோசமாக இருக்கிறார். அது தான் வேண்டும் என நினைத்து குடும்பத்தில் அனைவரும் முல்லைக்கு ஆறுதல் சொல்ல டிரீட்மென்ட் நடக்கிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாகும் முல்லை, மகிழ்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
டிரீட்மென்ட் முடிந்து முல்லையை ரெஸ்ட் எடுக்க வேண்டும் என டாக்டர் சொல்கிறார். அதனால் கதிர் அவரை நடக்க கூட விடாமல் பார்த்துக் கொள்கிறார். சீக்கரம் முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது முல்லையாக நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். அவர் தற்போது சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்து விலகிய ஆலியா மானசா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.