விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி குடும்பத்துடன் வெளியே வர குடும்பத்தில் நடந்த சந்தோசமான விஷயங்களை பற்றி நினைத்து பார்க்கிறார். பின் முல்லை வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர் இங்கையே இருக்கலாம் என சொல்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். உடனே மீனாவின் அப்பா அதை எல்லாம் பார்த்து சந்தோசப்படுகிறார். பின் மூர்த்தி வாசலில் வந்து நின்று வீட்டை வருத்தத்துடன் பார்க்கிறார். அவர் மட்டுமில்லாமல் மீனா, தனம், கண்ணன் என அனைவரும் வீட்டை வருத்தத்துடன் பார்க்கின்றனர். பின் எல்லாரும் கிளம்பி காரில் செல்கின்றனர். ஜனார்த்தனன் எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டோம் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மூர்த்தி குடும்பத்துடன் கதிர் வீட்டிற்கு வர அங்கேயும் பிறந்து வளர்ந்த வீட்டை நினைத்து வருத்தப்படுகிறார். பின் முல்லை தனது அம்மாவிடம் சாவி வாங்கி கொண்டு செல்கிறார். எல்லாரும் வீட்டிற்குள் செல்கின்றனர். வெளியே முல்லை அம்மா இதெல்லாம் தேவையா? பணத்தை வைத்து கொண்டு சந்தோசமாக இல்லாமல் ஏன் இப்படி இருக்காங்க என கேட்கிறார். பின் முருகன் இப்போ என்ன செய்ய சொல்கிறாய் என கேட்க முல்லை மாப்பிள்ளையும் இப்படி தான வெளியே வந்தார்கள் என பார்வதி சொல்கிறார்.
வீட்டிற்குள் வந்ததும் முல்லை தண்ணீர் கொடுக்க பாண்டியன் அழுது கொண்டே இருக்கிறான். வெளியே முருகனிடம் பார்வதி சண்டை போடுகிறார். பின்னர் மூர்த்தி, பெரிய வீடாக கட்டி போகலாம் என நினைத்தோம் ஆனால் இப்படி அவமானப்பட்டு வந்ததாக சொல்ல, ஜீவா ஆமாம் பெரிய வீடு கட்டி சீக்கிரம் சென்று விடுவோம் என சொல்கிறார். அவர் வாங்கவில்லை என்றால் வேற யாரவது வாங்க தான் போறாங்க அதனால் சீக்கிரமாக வெளியே வந்ததாக இருக்கட்டும் என கண்ணன் சொல்கிறார். தனமும் அதுவும் சரி தான் என சொல்ல, மீனா என்னை யாரும் தவறாக நினைக்காதீர்கள் என சொல்கிறார்.
கோபியை ஸ்கூலிற்கு வர வைத்த இனியா.. விஷயம் தெரிஞ்சு அதிர்ச்சி அடையும் பாக்கியா – இன்றைய எபிசோட்!
ஜீவா உன் அப்பா செய்தது ரொம்ப தவறு என சொல்கிறார். பின் தனம் விடு ஜீவா அதற்கு மீனா என்ன செய்வாள் என சமாதானம் செய்கிறார். பின் ஐஸ்வர்யா வீட்டை சுற்றி பார்க்க செல்ல, மீனா இடம் பிடிக்க போகிறாள் என நினைத்து அவளும் பின்னாடி வருகிறார். பின் வீட்டை பார்த்துவிட்டு ஒரு ரூமில் எப்படி எல்லாரும் இருக்க முடியும் என கேட்கிறார். அப்போது கொஞ்ச நாள் தான என சொல்கிறார். பின் மூர்த்தி இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்பட, புது வீடு கட்டும் வரை இங்கையே இருக்கலாம் என கதிர் சொல்கிறார். தனமும் அது தான் சரி என சொல்கிறார். முல்லை மறுபடியும் எங்களை விட்டு போகாதீங்க என சொல்ல, தனம் இனிமேல் நீங்க போனாலும் நாங்க விடமாட்டோம் என சொல்கிறார். பின் மூர்த்தி எல்லாரும் ஒரே இடத்தில் இருப்பது தான் சந்தோசம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.