ரத்து செய்யப்பட்ட பத்திரப்பதிவு, உச்சகட்ட கோவத்தில் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிரை அடிக்க ஆள் தயார் செய்வதாக சொல்ல கதிர் அதெல்லாம் ஒன்றும் ஆகாது என சொல்கிறார். மறுபக்கம் கதிரை தேடி ஜீவா செல்ல அவர்கள் வெளி ஊர் சென்றிருப்பதாக முருகன் சொல்கிறார். அதனால் பத்திரபதிவு நடக்காமல் மூர்த்தி தனத்திடம் கோவமாக பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், எதிர் டீம் ஆட்கள் போட்டி முடிந்ததும், கதிரை அடிக்க வேண்டும் என பேசிக் கொண்டிருப்பதை முல்லை கேட்டுவிடுகிறார். உடனே அவர் பதட்டமாக வந்து கதிரிடம் அவர்கள் பேசியதை சொல்கிறார். கதிர் என்னையும் உன்னையும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது நீ தைரியமாக இரு என சொல்கிறார். பின் கதிர் மூர்த்திக்கு போன் செய்து பேச ஆனால் மூர்த்தி போனை எடுக்கவில்லை. மூர்த்தி மீண்டும் போன் வருவதாக சொல்ல, கண்ணன் போனை எடுத்து பேச சொல்கிறார். ஆனால் மூர்த்தி வேற வேலை இல்லையா என கேட்டு போனை எடுக்கவில்லை. உடனே கண்ணன் போனை வாங்கி பிளாக் செய்து விடுகிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மறுபக்கம் ஜீவா கதிரை தேடி ஹோட்டல் செல்கிறார். முருகன் வாங்க என சொல்ல, கதிர் எங்கே என கேட்க அவர்கள் வெளி ஊர் சென்று இருப்பதாக முருகன் சொல்கிறார். வெளி ஊரா என ஜீவா கேட்க, ஆமாம் முல்லை தோழி வீட்டு விசேஷம் என சென்று இருப்பதாக சொல்கிறார். பத்திர பதிவு வைத்து கொண்டு ஏன் இப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை என முருகன் சொல்ல, ஜீவா அதிர்ச்சி அடைகிறார். நாங்க மூன்று பேரும் ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருப்பதாக ஜீவா சொல்கிறார். பின் கதிர் போன் செய்ய ஆனால் போனை எடுக்கவில்லை.
மறுபக்கம் முல்லை பார்வதிக்கு போன் செய்து இது போல வர முடியவில்லை என சொல்கிறார். நாங்க போட்டிக்கு வந்திருப்பதாக சொல்லுங்க என சொல்கிறார். பார்வதி மாப்பிள்ளை இல்லாமல் பத்திர பதிவு செய்யட்டும் என சொல்ல, முல்லை அம்மா நான் சொல்ல சொன்னதை சொல் என சொல்கிறார். பின் ஜீவா மூர்த்தியிடம் வந்து கதிர் வெளி ஊர் சென்று இருப்பதாக சொல்கிறார். மூர்த்தி கதிரை நினைத்து கோவமாக இருக்கிறார். மேலும் இடத்தை வாங்குபவர் வந்து இனிமேல் பத்திர பதிவு செய்ய முடியாது என சொல்ல, மூர்த்தி கோவமாக வீட்டிற்கு வருகிறார்.
மூர்த்தியிடம் தனம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா என கேட்க, கண்ணன் கதிர் வராததை பற்றி சொல்கிறார். தனம் அவன் அப்படி எல்லாம் வராமல் இருக்கமாட்டான் என சொல்ல, மூர்த்தி அவனுக்காக காத்து கிடந்தது தான் மிச்சம் என சத்தம் போடுகிறார். மீனா ஜீவாவிடம் கதிருக்கு தகவல் சொன்னீங்களா என கேட்க சொன்னேன் என ஜீவா சொல்கிறார். கடையில் சென்று பார்த்திருக்க வேண்டியது தான என தனம் கேட்க, அவன் மதுரைக்கு சென்று இருப்பதாக சொன்னதாக ஜீவா சொல்கிறார். மூர்த்தி கதிர் மீது கோவப்பட்டு பேச, தனம் அவர்களுக்கு போன் செய்து பார்க்கிறார். உடனே போன் ஆப் செய்திருக்க, என்ன நடந்தது என தெரியாமல் தனம் வருத்தப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.