பாக்கியலட்சுமி குடும்பத்துடன் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
தற்போது முல்லையின் கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டதால் குடும்பமே மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியலட்சுமி குடும்பத்துடன் இணைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என குடும்பத்தினர்கள் முடிவெடுக்கின்றனர். இந்த செயற்கைமுறை சிகிச்சைக்காக மட்டுமே 5 லட்சம் வரை எப்படியோ தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி செயற்கை முறை சிகிச்சை செய்கிறார்கள். ஆனால் இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை சில பேருக்கு மட்டுமே முதல் சிகிச்சையில் வெற்றி பெறும். பெரும்பாலும் பல முறை செய்தால் தான் இந்த செயற்கை முறை கருவூட்டல் சிகிச்சை வெற்றியை கொடுக்கும்.
Degree முடித்தவர்களுக்கு ரூ.1,77,500/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்காவிட்டால் மீண்டும் 5 லட்சம் கட்டி முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். ஒரு முறை ஐந்து லட்சம் கட்டவே குடும்பத்தினர்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். திரும்பவும் 5 லட்சம் கட்டுவது என்பது மிகவும் அரிதாகும். இதனால் எப்படியாவது இந்த சிகிச்சை வெற்றி பெற்றே தீர வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், முல்லைக்கு வயிற்றில் குழந்தை தங்கவில்லை. செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்துவிட்டது.
தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என முல்லை மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். இன்னிலையில் இந்த வாரம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மகா சங்கமம் நடைபெற இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியலட்சுமி குடும்பத்துடன் இணைய இருக்கிறார்கள். பாக்கியலட்சுமி சீரியலும் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள யாருக்காவது கோபியை பற்றிய உண்மை தெரிய வர வாய்ப்பிருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.