‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை VJ சித்ராவின் ஒரு ஆண்டுகால நினைவலைகள் – ரசிகர்கள் கவலை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜே சித்து. அவர் இறந்து வருகிற டிசம்பர் 9ஆம் தேதி ஒரு ஆண்டு முடிய உள்ள நிலையில் அவர் செய்த சுட்டித்தனங்கள் இன்னும் பலரது மனதில் இருக்கிறது.
விஜே சித்ரா:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் முல்லை கதிர் ஜோடிக்குக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்தார். அவரது பெயரை மறந்து அனைவரும் முல்லை என அழைக்கும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்துடன் அவர் ஒன்றி இருந்தார். ஆனால் அதுவே அவர் வாழ்க்கையை திருப்பி போட்டது. அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
பாரதி கண்ணம்மா சீரியலில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ரோஷினி – ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆனால் விஜே சித்ரா தனது காதலர் ஹேமந்த் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அந்த செய்தி ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் சித்ரா ஏன் இப்படி செய்து கொண்டார் என வருத்தம் தெரிவித்தனர். தற்போது அவர் இறந்து ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடிக்க தொடங்கினார். அதன் பின் தினமும் சித்துவை நினைக்காத நாள் இல்லை.
கண்ணம்மா ரோஷினியை மிஸ் செய்யும் பாரதி? ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் அருண் பிரசாத் அளித்த பதில்!
இப்படி இருக்க சித்துவை நினைவு கொள்ளும் விதமாக அவர் செய்த சுட்டித்தனங்களை வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். அதை பார்த்த ரசிகர்களுக்கு சித்துவின் பழைய ஞாபகங்கள் வருகிறது. மேலும் சித்து நம்மை விட்டு நீங்கினாலும் அவருடைய புகழ் நீங்காமல் இருக்கிறது. சித்து போல மீண்டும் ஒரு கலைஞர் சின்னத்திரைக்கு கிடைக்கமாட்டார் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சித்துவின் இறுதிநாள் அன்று அவரை நினைவுபடுத்தும் விதத்தில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.