“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த வார எபிசோட் – வெளியான புகைப்படம்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் லட்சுமி அம்மா இறந்துவிட்டதால் அவர்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படுகிறது. கண்ணன் தனது அம்மாவை பார்க்க வருவாரா என எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், வரும் வாரங்களில் நடக்க உள்ள எபிசோட் குறித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கடைசி மகன் கண்ணன் வீட்டினரின் அனுமதி இன்றி காதலித்து திருமணம் செய்து கொண்டதால் மன வருத்தத்தில் இருந்த லட்சுமி அம்மா இறந்து விடுகிறார். அவரின் பிரிவை தாங்க முடியாத குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். இந்நிலையில் கண்ணன் ஒரு வேலையாக திருச்சி சென்றிருக்கிறார். அம்மா இறந்த தகவல் சொல்ல கூட முடியாமல் இருக்கிறது. டிரைவருக்கு போன் செய்தால் அவர் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் ஊர் மக்கள் சீக்கிரமாக இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என சொல்கின்றனர்.
விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” வைல்ட் கார்ட் சுற்று முடிவுகள் – இறுதி போட்டிக்கு செல்லும் இருவர்!
தனம் கண்ணன் வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என சொல்ல, நடக்க வேண்டியதை செய்வோம். அதன் பின்னர் கண்ணன் வந்து விடுவான் என சொல்லி சமாளிக்கின்றனர். எல்லா காரியங்களையும் 3 அண்ணன்கள் செய்ய இறுதியாக நேரமாகி விட்டது என ஊர் மக்கள் சொல்கின்றனர். லட்சுமி அம்மா உடலை அடக்கம் செய்ய அனைவரும் புறப்படுகின்றனர். கண்ணன் வருவானா இறுதியாக அம்மா முகத்தை பார்ப்பானா என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.
சந்தியாவை வீட்டிற்கு அழைத்து வரும் சரவணன், சிவகாமி ஏற்றுக் கொள்வாரா? “ராஜா ராணி 2” ப்ரோமோ!
இந்நிலையில், அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தனம் முல்லை மீனா ஆகியோர் இணைந்து சந்தோசமாக போட்டோ எடுத்துள்ளனர். போன வாரம் தான் மாமியார் இறந்திருக்கிறார். இந்த வாரம் இவ்வளவு சந்தோசமா ஒரு வேளை தனத்திற்கு குழந்தை பிறந்திருக்குமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.