ஆட்டோ டிரைவராக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் குடும்பத்திற்கு தெரியாமல் கண்ணனும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இன்றைய எபிசோடில் கண்ணன் வேலை தேடி அலையும் நிலையில், ஒரு புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சின்னத்திரையில் நெகட்டிவ் ரோல் இல்லாத ஒரே தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கூட்டு குடும்பத்தின் பாசத்தை மையமாக கொண்ட கதையும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பி என 4 பேர் உள்ளனர். அவர்கள் பாசத்தை பற்றியும் நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் மட்டுமே கதை உள்ளது. இந்த சீரியலில் மூத்த அண்ணி தனம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கிறார்.
மேலும் இந்த கதையில் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட கண்ணன் என்ற கடைசி தம்பியின் காதல் திருமணத்தால் அவர் வீட்டை விட்டு அனுப்பப்படுகிறார். அதனால் அவரை பிரிந்து வீட்டில் இருப்பவர்கள் கவலையில் உள்ளனர். அவரது அம்மாவிற்கு உடம்பே சரி இல்லாமல் சென்று விடுகிறது. என்ன தான் தம்பி மீது கோவம் இருந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்கள் அவனுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்து வருகின்றனர்.
‘பாரதி கண்ணம்மா’ பரீனா மீது ரசிகரின் மோசமான விமர்சனம் – நெகட்டிவ் கமெண்ட்டிற்கு பதிலடி!
இன்றைய எபிசோடில் கண்ணன், ஐஸ்வர்யாவை கல்லூரிக்கு செல்ல சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா நான் வேலைக்கு செல்கிறேன் என சொல்கிறார். அதெல்லாம் இல்லை நான் இப்பவே வேலை தேடணும் என கண்ணன் சொல்லி கடை கடையாக இறங்கி வேலை தேடுகிறார். அதை கதிர் பார்த்துவிட்டு மீனாவின் அப்பாவிடம் வேலை கேட்கிறார். இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஐஸ்வர்யா ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்த புகைப்படம் பார்க்கும் ரசிகர்கள், இதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.