விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – இரண்டாக பிரியும் குடும்பம்?

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - இரண்டாக பிரியும் குடும்பம்?
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - இரண்டாக பிரியும் குடும்பம்?
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – இரண்டாக பிரியும் குடும்பம்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து நடைபெற இருக்கும் காட்சிகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

விஜய் டிவியில் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான். கண்ணனின் அம்மா கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் நினைத்து வெதும்பி போய் இறந்து போய் விடுகிறார். இவரது இறப்பு செய்தி கூட இன்னும் கண்ணனை எட்டவில்லை. கண்ணன் வேலை விஷயமாக திருச்சி சென்று விடுகிறார். அவர் போன் எடுத்து கொள்ளாமல் சென்று விடுகிறார்.

டிக்டாக் பிரபலம் திவ்யா திடீர் கைது – போலீசார் அதிரடி!

கண்ணன் வந்தால் மட்டுமே லட்சுமி அம்மாள் உடலை எடுக்க வேண்டும் என்று வீட்டினர் கூறுகின்றனர். இதனால் கண்ணன் வந்து கடைசியாக அவரது தாயார் முகத்தினை பார்ப்பாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி வருகிறது. தற்போது இந்த எபிசோடுக்கு அடுத்ததாக எது போன்ற காட்சிகள் ஒளிபரப்பகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா தனது அன்னை மரணத்தினை அடுத்து மிகவும் கவலையாக இருந்து வருகிறார். இதனால் கோபம் அடையும் மீனா தனது மகளுடன் அப்பா வீட்டிற்கு செல்லுகிறார்.

சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் உறுதி? படத்தில் நடிக்க ஒப்பந்தம்! ரசிகர்கள் ஷாக்!

மீனா ஏற்கனவே ஜீவா தனது குடும்பத்தினர் பற்றி கவலைபட்டால் மிகவும் கோபம் அடைவது வழக்கம் தான். அதே போல் இந்த முறையும் தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான ஒரு புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் மூர்த்தி சோகமாக இருக்கிறார். குழந்தை கயலை ஜீவா வைத்து இருக்கிறார். குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கட்டபையில் வைத்து பேக் செய்து வைத்திருக்கின்றனர். இது போன்ற காட்சிகள் தான் அடுத்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனா பிரிந்து விட்டால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் இரண்டாகும் என்றும் நம்பப்படுகிறது. ஏற்கனவே கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!