தாயின் முகத்தை இறுதியாக பார்க்க கண்ணன் வருவாரா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

0
தாயின் முகத்தை இறுதியாக பார்க்க கண்ணன் வருவாரா? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
தாயின் முகத்தை இறுதியாக பார்க்க கண்ணன் வருவாரா? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
தாயின் முகத்தை இறுதியாக பார்க்க கண்ணன் வருவாரா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் லட்சுமியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் இறுதியாக தாயின் முகத்தை காண கண்ணன் வருவானா என எதிர்பார்த்து முழு குடும்பமும் காத்திருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த வாரத்துக்கான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில், மூர்த்தியின் அம்மா லட்சுமி எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சொந்தம் பந்தம் என பலரும் வருகை தந்து கொண்டுள்ளனர். அதே போல லட்சுமியை காண வரும் ஐஸ்வர்யாவை, பார்வதி பார்க்கவிடாமல் தடுத்து விடுகிறார். ஆனால் அம்மா இறந்தது கூட தெரியாமல் இருக்கும் கண்ணன் இப்போது தான் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.

கண்ணன் தான் லட்சுமி அம்மா இறப்பிற்கு காரணம் என சொல்லும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

இந்த காட்சிகள் அனைத்தும் இந்த வார எபிசோடுகளில் இதுவரை ஒளிபரப்பாகியுள்ளது. இதை தொடர்ந்து வரும் நாட்களில் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில், இறந்து போன லட்சுமிக்கு எப்போது இறுதி சடங்கு செய்ய போகிறீர்கள், சீக்கிரம் செய்ய வேண்டும் இல்லையென்றால் அது சரியில்லை என அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் கண்ணன் வராமல் அம்மாவை இங்கிருந்து கொண்டு போவதில்லை என மூர்த்தி உறுதியாக கூறுகிறார்.

கொரோனா பாதித்து மருத்துவமனைக்கு செல்ல தாமதத்தால் 2799 பேர் பலி – மாநில சுகாதாரத்துறை அறிக்கை!

பின்பு ஜீவா, ஜனார்த்தனனிடம் வந்து ஐஸ்வர்யா மட்டும் இங்கே இருக்கிறாள், கண்ணன் எங்கு என கேட்கிறார். அப்போது பொருட்களை ஏற்றுவதற்காக திருச்சி வரை கண்ணனை அனுப்பியதாக அவர் கூறுகிறார். பின், நேரம் செல்ல வீட்டு வாசலில் பந்தல் அமைத்து லட்சுமியை அங்கே கிடத்தி வைத்துள்ளனர். லட்சுமிக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என மீண்டுமாக கேள்வி எழ, அதற்கு தனம் கண்ணன் வந்தா தான் செய்ய முடியும் என கூறுகிறார்.

ஆனால் ஊர்காரர்கள் தொடர்ந்து நச்சரித்து கொண்டே இருக்க ஆக வேண்டிய காரியங்களை மற்ற அனைவரும் பார்க்கின்றனர். இதையடுத்து, லட்சுமியை மலர் படுக்கையில் வைத்து தெருவில் எடுத்து செல்ல, ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார். இறுதியாக தாயின் முகத்தை பார்க்க கண்ணன் வருவானா என்றதொரு கேள்வியோடு அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!