லட்சுமி அம்மா இறந்ததற்கு கண்ணன் தான் காரணம் என சொல்லும் ஊர் மக்கள், வருத்தத்தில் கண்ணன் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் அம்மா கஸ்தூரி வீட்டிற்கு துணி எடுக்க வர, அப்போது மல்லியும் அங்கே இருக்கிறார். அவரும் கஸ்தூரியும் சேர்ந்து தனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பது போல பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் அம்மா கஸ்தூரி வீட்டிற்கு புடவை எடுக்க வருகிறார். அப்போது அங்கே மல்லியும் இருக்கிறார். மல்லி இன்னும் கிளம்பவில்லையா என கேட்க,ஆமாம் என சொல்கிறார். அப்போது வந்த தனத்தின் அம்மா தனத்தை அனைவரும் புகழ்ந்து பேசினார்கள் என சொல்கிறார். உடனே கஸ்தூரி மல்லி கோபத்தில் இருக்கின்றனர். இனிமேல் தனத்தை கையில் பிடிக்க முடியாது என கஸ்தூரி சொல்ல, ஆமாம் நான் விட்டு போன வாழ்க்கையை எப்படி நன்றாக வாழுவேன் என காட்ட என்னை கூப்பிட்டது போல இருக்கிறது என மல்லி சொல்கிறார்.
பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ சொல்லும் வேணு, கவலையில் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
தனம் தான் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய சொல்லி கண்ணனிடம் சொல்லிருப்பார் என கஸ்தூரி சொல்கிறார். பின் தனத்தின் அம்மா அங்கிருந்து கிளம்ப, மறுபக்கம் ஐஸ்வர்யா குடத்தில் தண்ணீர் தூக்கி வருகிறார். அப்போது அக்கம் பக்கத்தினர் நீ பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி மருமகள் தான என சொல்லி உன்னால் தான் அந்த அம்மா இறந்துவிட்டார்கள் என சொல்கிறார். படிச்ச பெண் தான இப்படி செய்யலாமா என கேட்கிறார்.
பின் கண்ணன் தூங்கி கொண்டிருக்க ஐஸ்வர்யா டீ போடுகிறார். பின் கண்ணன் எழுந்து தனியா எங்கையும் போகாதே என சொல்கிறார். பின் காலேஜ் போக சொல்ல, இன்னும் சிறிது நாள் ஆகட்டும் போவோம் என சொல்கிறார். கண்ணன் கடைக்கு சென்று வேலையை தொடங்குவோம் என சொல்ல, அந்த நேரம் கடையில் வேலை செய்பவர் வருகிறார். இனிமேல் வேலைக்கு வருவியா என கேட்க, ஏன் வருவேன் என சொல்கிறார். நீ பெரிய ஆள் ஆச்சே நீ வேலைக்கு வருவியா உன்னால் தான் அம்மா இறந்துவிட்டார் என ஊருக்குள்ளே சொல்கின்றனர் என சொல்கிறார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,630 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
உடனே ஐஸ்வர்யா திட்டி அனுப்ப, தனத்தின் வீட்டில் லட்சுமி அம்மா கட்டிலை பார்த்து தனம் அழுகிறார். பின் மீனா வந்து தனத்திற்கு ஆறுதல் சொல்ல, அந்த நேரம் தனத்தின் அம்மாவும் வருகிறார். லட்சுமி அம்மா எங்கையும் போகவில்லை இங்கே தான் இருக்கிறார் அதனால் தான் அப்படி தோன்றியது என சொல்கிறார். பின் தனம் சமைக்க செல்ல, மீனா நானே சமைக்கிறேன் என சொல்கிறார். தனத்தின் அம்மா நான் சொல்லி கொடுக்கிறேன் என சொல்கிறார். பின் கண்ணன் கடைக்கு செல்ல ஜனார்த்தனன் அம்மா சாவுக்கு நீ தான் காரணம் என சொல்லி திட்டுகிறார். கடையில் இருக்கும் பையனும் சேர்ந்து பேச, ஜனார்த்தனன் அவனை அடித்துவிடுகிறார். இவன் என் சொந்தக்காரன் நான் பேசுவேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.