அத்தை கனவில் வந்ததை சொல்லி வருத்தப்படும் தனம், கடையை திறக்க செல்லும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கனவில் அத்தை வந்ததை சொல்லி அழுகிறார். எல்லாரும் அழ வேண்டாம் என அத்தை சொன்னதாக சொல்கிறார். பின் தனம் எல்லாத்தையும் மறந்து பழையபடி இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் திடீரென எழுந்து அத்தை அத்தை என கத்திக் கொண்டே வாசல் சென்று பார்க்கிறார். அப்போது அனைவரும் தனத்திற்கு என்னாச்சு என கேட்க, தனம் அத்தை எங்கே என கேட்கிறார். முல்லை அத்தை எப்படி இங்கே இருப்பாங்க என கேட்க, அத்தை இப்போ இங்கே வந்தாங்க, என்னிடம் பேசினார்கள். இங்கையே தான் நான் இருப்பேன் ஏன் எல்லாரும் அழுறாங்க என கேட்டாங்க, எல்லாரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என என்னிடம் சொன்னாங்க என சொல்லி அழுகிறார்.
அப்போது ஜீவா கதிர் வந்து ஆமாம் அம்மா எங்கையும் போகவில்லை இங்க நம்ம கூட தான் இருக்காங்க என சொல்கிறார். பின் தனம் குளித்துவிட்டு சமையல் அறை சென்று பார்க்க அங்கே எல்லாம் குப்பையாக கிடக்கிறது. அதை எல்லாம் சுத்தம் செய்து இட்லி ஊத்தி வைத்து எல்லா வேலைகளையும் செய்கிறார். அப்போது தனத்தின் அம்மா வந்து, என்னாச்சு உனக்கு என கேட்க, நேற்று வரை இடிஞ்சு போய் உக்காந்திருந்த ஆனால் இன்னைக்கு என்ன நடந்தது என கேட்க, நான் மாறினால் தான் இந்த வீடு மாறும் என சொல்கிறார்.
நெஞ்சுவலியால் துடிக்கும் பாரதி, கண்ணம்மாவை வர வைக்க திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
அனைத்தும் சமைத்து வைத்து வீட்டில் இருக்கும் அனைவரும் டீ கொண்டு போய் கொடுக்கிறார். ஜீவா எதுவும் சாப்பிடாமல் அமர்ந்திருக்க, மீனா எதாவது வேண்டுமா என கேட்கிறார். கதிர் கயல் பாப்பா எங்கே என கேட்க, அவள் உள்ளே தூங்குகிறாள் என்ன நடக்கிறது என அவளுக்கு தெரியவில்லை என சொல்கிறார். தனம் டீ கொண்டு போய் கொடுக்க எல்லாரும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். தனத்தின் அம்மாவை மூர்த்தி பார்க்க நான் எதுவும் செய்யவில்லை தனம் தான் செய்தால் என சொல்கிறார்.
தனம் அனைவரையும் டீ குடிக்க சொல்லிவிட்டு கடையை திறக்க சொல்கிறார். மூர்த்தி இப்போ என்ன அவசரம் என கேட்க, தனம் இப்படியே இருந்தால் மனசு கஷ்டமாக இருக்கும். நீ சென்று கடையை திறக்க வேண்டும் அப்போது தான் நம்ம குடும்பம் நன்றாக இருக்கும் என சொல்கிறார். அத்தை என்னை வந்து பார்த்துவிட்டு உன்னை நம்பி தான விட்டு சென்றேன் ஏன் இப்படி எல்லாரும் கஷ்டப்படுறாங்க என கேள்வி மேலே கேள்வி கேட்கிறார்.
ICC டி20 உலகக்கோப்பை போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி – பிசிசிஐ கோரிக்கை!
உடனே மீனாவும் ஆமாம் ஜீவா கடைக்கு சென்றால் தான் நிம்மதியாக இருக்கும் என சொல்கிறார். பின் மூர்த்தி உங்களால் தான் என் அம்மா இத்தனை வருஷம் நன்றாக இருந்தார்கள் நீங்க கிடைக்க நாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சொல்லிவிட்டு கடைக்கு கிளம்ப சொல்கிறார். தனம் சாப்பிட்டு போக சொல்ல, தனத்தின் அம்மாவும் சாப்பிட சொல்கிறார். உடனே மீனா நீங்க சரியாக பேசிவிட்டீங்க என சொல்ல, உடனே தனம் இதெல்லாம் நன்றாக பேசு ஆனால் தோசை மாவை அப்படியே வெளியே வைத்திருக்க என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.