ஐஸ்வர்யாவை துரத்தும் கஸ்தூரி, இறுதி சடங்குகள் நடத்தும் அண்ணன்கள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
ஐஸ்வர்யாவை துரத்தும் கஸ்தூரி, இறுதி சடங்குகள் நடத்தும் அண்ணன்கள் - இன்றைய
ஐஸ்வர்யாவை துரத்தும் கஸ்தூரி, இறுதி சடங்குகள் நடத்தும் அண்ணன்கள் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
ஐஸ்வர்யாவை துரத்தும் கஸ்தூரி, இறுதி சடங்குகள் நடத்தும் அண்ணன்கள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மாவை பார்க்க ஐஸ்வர்யாவை வீட்டிற்கு வர சொன்ன மீனா. அவர் உள்ளே வந்ததும் அவரை திட்டி வெளியே அனுப்பும் கஸ்தூரி. மேலும் இறுதி சடங்கிலும் எதுவும் பண்ண விடாமல் தடுக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், வண்டி டிரைவரிடம் கண்ணன் போன் கேட்க அவர் தர முடியாது என சொல்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் ஊருக்கு போயிருவோம் அங்கே சென்று பேசிக் கொள் என டிரைவர் சொல்கிறார். பின்னர் லட்சுமி அம்மாவை சுற்றி அனைவரும் அழுது கொண்டிருக்க மல்லி காரில் வந்து இறங்குகிறார். அவர் மாலை போட்டுவிட்டு அழுது இரங்கல் தெரிவிக்கிறார். வெளியே ஐஸ்வர்யா நிற்பதை பார்த்து பயங்கர கோவத்தில் இருக்கிறார்.

மீனாவை அனைவருக்கும் டீ கொடுக்க சொல்ல, அவர் வெளியே சென்று அனைவருக்கும் டீ கொடுக்கிறார். கண்ணன் எங்கே என ஜீவாவிடம் கேட்க அவனுக்கு இன்னும் தகவல் சொல்லவில்லை என சொல்கிறார். உடனே மீனா ஐஸ்வர்யாவிடம் சென்று உள்ளே வரும்படி சொல்கிறார். ஐஸ்வர்யா உள்ளே செல்ல மூர்த்தி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். உள்ளே சென்றதும் கஸ்தூரி அவரை பார்த்து பயங்கரமாக திட்டுகிறார். நன்றாக இருந்த அம்மாவை இப்படி கொன்னுட்ட, இப்போ எதற்கு இங்கே வந்த வெளியே போ என திட்டி வெளியே அனுப்புகிறார்.

லட்சுமிக்கு சமைத்து கொடுத்ததால் கோவத்தில் பாரதி, வெண்பாவை வர வைத்து வெறுப்பேத்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

ஐஸ்வர்யா வெளியே வந்ததும், ஜனார்த்தனன் மூர்த்தி பாவமாக அவரை பார்க்கிறார். பின்னர் தனம் கண்ணன் எங்கே என கேட்க, அவனுக்கு தகவல் சொல்லமுடியவில்லை போனை எடுத்துக் கொண்டு போகவில்லை என சொல்கிறார். ஊர் பெரியவர் இப்படியே வைத்திருக்க முடியாது திருவிழா வேற வருது என சொல்ல, கண்ணன் வந்து பார்க்க வேண்டும் அவனுக்கு இவர் அம்மா என தனம் சொல்கிறார். உடனே பெரியவர் வெளியே சென்று நடக்க வேண்டியதை செய்வோம் கண்ணன் அதற்குள் வந்துவிடுவான் என சொல்கிறார்.

பின்னர் செய்ய வேண்டிய முறைகள் செய்யப்படுகின்றனர். நீர் மாலை எடுக்க சென்று வந்து அனைத்து காரியங்களும் நடத்தப்படுகின்றனர். அப்போது ஐஸ்வர்யா முறை செய்ய வர கஸ்தூரி தடுக்கிறார். நானும் அவங்களுக்கு மருமகள் தான என கேட்க, நீ முறைப்படி திருமணம் செய்து வந்தவள் மாதிரி பேசாதே என துரத்துகிறார். ஐஸ்வர்யா அழுது கொண்டே தள்ளி சென்று நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!