லட்சுமி அம்மாவிற்கு இறுதி சடங்கு நடத்தும் குடும்பத்தினர், எதுவும் தெரியாமல் இருக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
லட்சுமி அம்மாவிற்கு இறுதி சடங்கு நடத்தும் குடும்பத்தினர், எதுவும் தெரியாமல் இருக்கும் கண்ணன் - இன்றைய
லட்சுமி அம்மாவிற்கு இறுதி சடங்கு நடத்தும் குடும்பத்தினர், எதுவும் தெரியாமல் இருக்கும் கண்ணன் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
லட்சுமி அம்மாவிற்கு இறுதி சடங்கு நடத்தும் குடும்பத்தினர், எதுவும் தெரியாமல் இருக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மாவின் உடலிற்கு இறுதி சடங்குகள் செய்யும் குடும்பத்தினர். அம்மா இறந்தது கூட தெரியாமல் இருக்கும் கண்ணன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா உடலிற்கு இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. பந்தல் போட ஆட்கள் வரவைக்கப்படுகின்றனர். தனம் மற்றும் குடும்பத்தினர் இன்னும் அம்மாவின் பிரிவு தாங்க முடியால் அழுது கொண்டிருக்கின்றனர். ஜனார்த்தனன் மூர்த்தியை அழைத்து, நடந்தது நடந்து போச்சு நீங்களே இப்படி அழுதால் உங்க தம்பிகளுக்கு யாரு ஆதரவாக இருப்பார். மனித வாழ்க்கையில் இறப்பு இயல்பு தான, நாம தான் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

என்னுடைய அம்மா அப்பாவும் அப்படி தான் திடீரென இறந்துவிட்டனர். நான் அதில் இருந்து மீண்டு வரவில்லையா. நீங்க தான் உங்க தம்பிக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். அம்மா நன்றாக ஆண்டு அனுபவிச்சிட்டு போய்ட்டாங்க அவங்களை நல்லபடியாக வழி அனுப்பி வைக்க வேண்டும் என ஜனார்த்தனன் சொல்கிறார். மூர்த்தி வந்து கதிர் ஜீவாவை எழுப்பி அம்மா நம்மளை விட்டு போனாலும் அம்மா உடைய ஆத்மா நம்ம கூடவே தான் இருக்கும் என மூர்த்தி சொல்கிறார்.

லட்சுமிக்கு உணவு சமைத்து தரும் சௌந்தர்யா, கண்ணம்மாவை ஏமாற்றும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அம்மாவை நல்லபடியாக வழி அனுப்பி வைக்க வேண்டும். அடுத்த காரியங்களை நல்லபடியாக செய்ய வேண்டும் என சொல்கிறார். அம்மாவிற்கு அழுதால் பிடிக்காது என மூர்த்தி சொல்கிறார். நமக்கு உங்க அண்ணி இருக்கா அவ எல்லாத்தையும் பார்த்துக் கொள்வாள் என சொல்கிறார். பின் லட்சுமி அம்மாவிற்கு சடங்குகள் நடைபெறுகிறது. தனத்தின் அம்மா இங்கே தனம் நிற்க வேண்டாம் என சொல்கிறார். முல்லை புடவை எடுத்து வந்து கொடுக்க, எல்லா சடங்குகளும் நல்லபடியாக நடக்கிறது.

பின் மாலை அணிவித்து அனைவரும் இறுதி சடங்கை செலுத்துகின்றனர். மூர்த்தி வெளியே வந்து நிற்க அங்கே தனத்தின் அண்ணி வருகிறார். அவர் கதறி அழ, அம்மாவை நல்ல படியாக வழி அனுப்புறது மட்டும் நீங்க பண்ணுங்க என ஜனார்த்தனன் சொல்கிறார். பின் ஜீவா வெளியே வந்து கண்ணன் எங்கே என கேட்க, எனக்கு இப்படி நடக்கும் என தெரியாது அவனை திருச்சி வரை அனுப்பிருக்கேன், அவன் போனும் ஐஸ்வர்யாவிடம் தான் இருக்கிறது என சொல்கிறார்.

‘இன்ஸ்பிரேஷன்-4’ விண்வெளி சுற்றுலா பயணம் வெற்றி – வரலாற்று சாதனை!

கண்ணனுக்கு எப்படியாவது தகவல் சொல்ல வேண்டும் என ஜீவா சொல்ல, டிரைவர் நம்பருக்கு போன் செய்கிறேன் என சொல்கிறார். நடப்பது எதுவும் தெரியாமல் டிரைவர் தனது மனைவியிடம் சண்டை போட, கண்ணன் போன் கிடைக்குமா என கேட்கிறார். ஜனார்த்தனன் சரியாக டிரைவருக்கு போன் செய்ய அவர் அதை எடுக்காமல் விடுகிறார். கண்ணன் எடுக்க சொல்ல, எடுத்தால் என்னை அண்ணாச்சி திட்டுவார்கள் என சொல்கிறார். போனை தாங்க நான் ஐஸ்வர்யாவிடம் போன் பேசுகிறேன் என சொல்ல இன்னும் சிறிது நேரத்தில் ஊருக்கு சென்றுவிடுவோம் என டிரைவர் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!