லட்சுமி அம்மா இறப்பை தாங்க முடியாமல் கதறி அழும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
லட்சுமி அம்மா இறப்பை தாங்க முடியாமல் கதறி அழும் குடும்பத்தினர் - இன்றைய
லட்சுமி அம்மா இறப்பை தாங்க முடியாமல் கதறி அழும் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
லட்சுமி அம்மா இறப்பை தாங்க முடியாமல் கதறி அழும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா இறந்துவிட்டதை நம்ப முடியாமல் தனம் இருக்கிறார். பின்னர் கதிர் தனத்தின் கையை பிடித்து இல்லை என்பது போல தலையாட்ட தனம் கதறி அழுகிறார். அக்கம் பக்கத்தினர் மற்றும் தனத்தின் அண்ணனும் வந்து கதறி அழுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா இறந்ததை நம்ப முடியாமல் தனம் இருக்கிறார். அப்போது கதிர் தனத்தின் கையை பிடித்து அம்மா இல்லை என்பது போல தலையாடுகிறார். தனம் அதை கேட்டு தாங்க முடியாமல் கதறி அழுகிறார். தனத்தின் அம்மா அவரை பிடிக்க அவர் மயக்கமாக செல்கிறார். உடனே மீனா தண்ணீர் கொண்டு வந்து அடிக்க, தனம் எழுந்து பயங்கரமாக அழுகிறார். அக்கம் பக்கத்தினர் என்ன சத்தம் என தெரியாமல் உள்ளே வந்து பார்க்கின்றனர்.

அப்போது லட்சுமி அம்மா இறந்ததை பார்த்து எல்லாத்துக்கும் கண்ணன் தான் காரணம் என சொல்கின்றனர். அப்போது மூர்த்தி கதிர் ஜீவா அனைவரும் பயங்கரமாக அழுகின்றனர். தனத்தின் அம்மா வெளியே வந்து ஜெகாவிற்கு போன் செய்து சொல்கிறார். ஜெகா போனை எடுத்ததும் என்னாச்சு அம்மா தனத்திற்கு வலி வந்துருச்சா என கேட்கிறார். இல்லை அதை நான் எப்படி சொல்வது சம்மந்தி அம்மா நம்மளை விட்டு போய்ட்டாங்க என சொல்கிறார்.

இரட்டை குழந்தைகள் பற்றி அகிலிடம் கேட்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அதை கேட்டு தனத்தின் அண்ணா உடனே கிளம்பி வருகிறார். தனம் என் குழந்தையை பார்க்க வேண்டும் என அவ்வளவு ஆசை உடன் இருந்தீங்க ஆனால் இப்படி போய்ட்டீங்களே என சொல்லி அழுகிறார். உடனே ஜெகா அங்கே வர லட்சுமி அம்மாவை பார்த்து அழுகிறார். பின்னர் மூர்த்தியை கட்டிப்பிடித்து அழுகிறார். கஷ்டப்படும் போது கூட இருந்தாங்க ஆனால் இப்போ இப்படி சென்றுவிட்டார் என சொல்லி மூர்த்தி அழுகிறார். ஜீவாவும் தாங்க முடியாமல் அழுகிறார்.

அப்போது ஜீவா அங்கே இருக்க முடியாமல் வெளியே செல்ல கதிரும் பின்னால் வருகிறார். இருவரும் வெளியே வந்து அழுகின்றனர். கயல் பாப்பா எழுந்து அழ, முல்லை அவளை தூக்கி வைத்துக் கொள்கிறார். மீனா வெளியே சென்று ஜீவாவிற்கு ஆறுதல் சொல்ல, ஜெகா முல்லையின் அப்பாவிற்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார். அதை கேட்டு அவர் அதிர்ச்சியில் ரோடில் அழுகிறார். பின்னர் ஜெகா வெளியே வந்து கதிர் ஜீவாவிடம் நடந்தது நடந்துவிட்டது இனிமேல் நடக்க இருப்பதை பாப்போம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!