தனத்திடம் கண்ணன் பற்றி பேசி கவலைப்படும் லட்சுமி அம்மா, தவறாக நடக்க இருப்பது போல கனவு காணும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பார்வதி அம்மா தூக்கம் வராமல் தனத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். கண்ணனை இப்படியே விடாமல் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்கிறார். கதிர் துக்கத்தில் லட்சுமி அம்மாவை பற்றி கனவு ஒன்றை காண்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா தூக்கம் வராமல் இருக்க தனத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். நாளைக்கு மாமா நினைவு நாள் என சொல்ல, ஏன் மாமா நினைப்பாகவே இருக்கீங்க என என தனம் கேட்கிறார். அவர் திடீரென போய்ட்டார் அதன் பின்னர் மூர்த்தி தான் எல்லாம் பார்த்துக்கிட்டான். அப்பறம் நீயும் வந்த, நீ மட்டும் இல்லையென்றால் இந்த குடும்பம் ஒடஞ்சுருக்கும், அப்பறம் முல்லை வந்தால், மீனாவும் நல்ல மருமகள் தான் எனக்கு எந்த குறையும் இல்லை என சொல்கிறார்.
உனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என சொல்ல, நான் எங்கிருந்தாலும் அதை பார்த்துக் கொண்டிருப்பேன் என சொல்கிறார். எங்கே இருக்க போறீங்க என சொல்ல நீங்க வீட்டில் இருப்பேன் நீங்க வீட்டில் இருக்க போறீங்க என தனம் சொல்கிறார். 4 பேரும் சேர்ந்து இருக்கணும்னு நான் நினைத்தேன் ஆனால் அது மட்டும் நடக்கவில்லை. அவனை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான என கேட்க, தனம் நல்ல பொண்ணு தான், கஷ்டம் தெரியாமல் வளர்ந்ததால் கண்ணன் இப்படி செய்துவிட்டான் என தனம் சொல்கிறார்.
அதன் பின்னர் உள்ளே இருக்கும் நகை எல்லாம் உனக்கு தான் என சொல்கிறார். இப்போ எதற்கு பங்கு பிரித்து கொண்டிருக்கிங்க என கேட்க, என் அருகிலேயே இரு, எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொள்ளு எல்லாரையும் என சொல்கிறார். லட்சுமி அம்மா தூங்கிவிட்டு தனம் வெளியே வந்து மூர்த்தியிடம் அத்தை என்னென்னமோ பேசுகிறார். எதற்கு அப்படி பேசினார்கள் என தெரியவில்லை, எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது என சொல்லி, தனம் அத்தை பேசியது எல்லாத்தையும் சொல்கிறார்.
மாமா எதுவும் பிரச்சனை இருக்காதுல என கேட்க, இவ்வளவு நாள் உடம்பு முடியாமல் இருந்ததால் இப்போது இவ்வளவு நாள் பேசுகிறார் அதுனால எதுவும் இல்லை என கதிரும் ஜீவாவும் சொல்கிறார். முன்னாடி போல இல்லாமல் ஏதேதோ பேசினார் அத்தை அதான் ஒரு மாதிரி இருந்தது என சொல்லி அனைவரும் தூங்க செல்கின்றனர். கதிரும் ஜீவாவும் அம்மாவை பார்க்க செல்கின்றனர். கதிர் அம்மாவை பார்த்து வருத்தப்பட, என்னட என கதிர் சொல்கிறார். அம்மா என்ன சிரித்துக் கொண்டே தூங்குகிறார் என ஜீவா கேட்க, அண்ணியிடம் பேசிவிட்டு தூங்கிருப்பாங்க போல என சொல்கிறார்.
சமையல் எண்ணெய் மீதான வரி குறைப்பு – லிட்டருக்கு 5 ரூபாய் வரை சரியும் விலை? இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
பின்னர் கதிர் லைட்டை ஆப் செய்துவிட்டு தூங்க செல்கிறார். துக்கத்தில் கதிருக்கு அம்மா புகை சூழ்ந்த இடத்தில் இருந்து விட்டு செல்வது போல கனவு வருகிறது. அம்மா என கத்திக் கொண்டே கதிர் எந்திருக்க முல்லை என்னாச்சு என கேட்கிறார். பயங்கரமான கனவு என சொல்ல, தண்ணி கொடுக்கிறார். ஏன் இப்படி வேர்த்திருக்கு பயந்துவிட்டீர்களா என கேட்கிறார். கனவு பற்றி முல்லையிடம் சொல்கிறார். கவலை படாதீங்க எல்லாம் கனவு தான என முல்லை சொல்கிறார்.
கனவு தான் ஆனால் ஏன் இப்படி ஒரு கனவு வரணும் என கேட்கிறார். நீங்க அத்தை பற்றி எதாவது நினைத்திருப்பிங்க என சொல்லி கவலைப்படாமல் தூங்குங்க என முல்லை சொல்கிறார். ஒரு கனவே இவரால் தாங்க முடியவில்லை என முல்லை நினைக்கிறார். பின்னர் இருவரும் தூங்க மீண்டும் கதிருக்கு கனவு வருகிறது. கதிர் தூங்க முடியாமல் எழுத்துவிடுகிறார். அம்மாவை பார்க்க சென்று அருகில் அமர்ந்து அவரை தொட்டு பார்க்கிறார். பின்னர் மூச்சு உள்ளதா என பார்க்கிறார். மூச்சு இருப்பதை உணர்ந்து நிம்மதி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.