நகையை அடமானம் வைக்க செல்லும் கண்ணன், உதவி செய்யும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யாவின் நகையை அடமானம் வைத்து பணம் வாங்குவதற்காக கண்ணனும் அவர் நண்பனும் கடை தேடுகின்றனர். நகைக்கடைக்காரர் மூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்க மூர்த்தி நகை வாங்காமல் பணம் தர சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், அத்தை சரியாக பேசாமல் இருப்பதால் தான் உடம்பு சரி இல்லாமல் போனது என தனம் சொல்கிறார். ஜீவாவும் கதிரும் அம்மா ஹாஸ்பிடலில் இருந்து கஷ்டப்பட்டுவிட்டார் இனிமேல் வீட்டிற்கு வந்து சரியாக இருப்பார் என சொல்கின்றனர். பின்னர் கதிர் தனக்கு கனவு வந்ததாக சொல்கிறார். கனவில் ஒரு ஆண் குழந்தை வந்ததாக சொல்கிறார். கண்ணனுக்கு திருமணம் ஆன போது இப்படி தான் கனவு வந்தது என சொல்கிறார்.
அதனால் உங்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என சொல்கிறார். எல்லாரும் என்ன ஆண் குழந்தை என்று சொல்கின்றனர் என தனம் கேட்க, ஆமாம் அண்ணி ஏற்கனவே கயல் பாப்பா இருக்க இன்னும் ஒரு ஆண் குழந்தை வந்தால் நன்றாக இருக்கும் என ஜீவா சொல்கிறார். ஒரு வேளை முல்லை மாசமாக இருப்பாளோ என தனம் கேட்க கதிர் அங்கிருந்து கிளம்புகிறார்.
வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணம் ஆகாத உண்மையை சொல்லும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
கண்ணனும் அவர் நண்பரும் நகையை அடகு வைக்க கடையை தேடி அலைகின்றனர். ஒரு நகை கடைக்காரர், படிக்கிற பசங்ககிட்ட பணம் தர முடியாது என சொல்கின்றனர். யாரு என்று தெரியவில்லை என சொல்லி அங்கிருந்து அனுப்புகின்றனர். பின்னர் முல்லையும் கதிரும் லட்சுமி அம்மாவை பார்க்க அவர் உடல்நிலை சரியாகி நன்றாக பேசுகிறார். அப்போது தனம் அவர்களை பார்க்க வருகிறார். நீ எதற்கு இங்கே வந்த என லட்சுமி அம்மா சொல்கிறார்.
எனக்கு என்ன நல்ல பசங்க நல்ல மருமகள் கிடைச்சிருக்காங்க என லட்சுமி அம்மா சொல்கிறார். பின்னர் முல்லையை கிண்டல் செய்ததை சொல்லி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர் கண்ணன் ஒரு நகைக்கடைக்கு செல்கிறார். அங்கே கண்ணனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என சொல்ல, கண்ணன் எவ்வளவு பணம் கிடைக்கும் என கேட்கிறார். இப்போ கிளம்பிட்டு மாலை வாங்க என நகைக்காரர் சொல்லி ஒரு சீட்டு ஒன்றை கொடுக்கிறார்.
ஐஸ்வர்யா நகை அடமானம் வைத்துவிட்டியா என கேட்க ஒரு தெரிஞ்சவரிடம் கொடுத்துவிட்டு வந்துருக்கேன். மாலை வந்து வாங்கிக்க சொன்னாரு என சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார். நகையை கொடுத்துவிட்டு பணம் வாங்காம வந்திருக்கீங்க என ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார். அவர் எழுதி கொடுத்திருக்கார் என காட்ட இதில் நகையின் எடை தான் இருக்கு என ஐஸ்வர்யா சொல்கிறார். அப்படியெல்லாம் நடக்காது என கண்ணன் சொல்கிறார்.
இப்படி இருக்கீங்களே என சொல்லி கண்ணனை திட்டுகிறார். கொடுத்தது நம்ம தப்பு தான் என கண்ணன் சொல்ல, நமக்கு எல்லாமே தப்பாக தான் நடக்குது என சொல்ல, கண்ணன் நகையை வாங்க கிளம்புகிறார். நகைக்கடைக்காரர் மூர்த்திக்கு போன் செய்து உங்க தம்பி கண்ணன் நகை அடமானம் வைக்க வந்தார் என சொல்கிறார். மூர்த்தி இனிமேல் அவன் கதையை என்னிடம் பேசாதீர்கள் என சொல்லி போனை வைக்கிறார். பின்னர் மூர்த்தி மனம் கேட்காமல் போன் செய்து அவனிடம் நகை வாங்காமல் பணம் கொடுங்கள் என சொல்கிறார்.