மீனாவை வீட்டு வேலை செய்ய சொல்லும் தனத்தின் அம்மா, குழந்தை நினைப்பாக இருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மீனாவை வீட்டு வேலை செய்ய சொல்லும் தனத்தின் அம்மா, குழந்தை நினைப்பாக இருக்கும் மூர்த்தி - இன்றைய
மீனாவை வீட்டு வேலை செய்ய சொல்லும் தனத்தின் அம்மா, குழந்தை நினைப்பாக இருக்கும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மீனாவை வீட்டு வேலை செய்ய சொல்லும் தனத்தின் அம்மா, குழந்தை நினைப்பாக இருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் அம்மா மீனாவிற்கு வீட்டு வேலைகளை செய்ய சொல்லி கொடுக்கிறார். பின் மூர்த்தி வேலையில் இருந்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்து குழந்தையுடன் இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிருக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க கதிர் இரவு பேசியதை நினைத்து கிண்டல் செய்கிறார். பின் தனத்தின் அம்மா மீனாவை வீட்டு வேலை செய்ய சொல்லி சொல்ல, அவர் செய்கிறார். பின் மீண்டும் மீண்டும் மீனாவிடம் வேலை வாங்க அவர் வருத்தத்துடன் வேலை செய்கிறார். அப்போது தனம் குழந்தையுடன் வர கயல் அழுகிறார் என அவளையும் பார்த்துக் கொண்டு தனது குழந்தையை பார்க்கிறார்.

அப்போது தனத்தின் அம்மா வந்து தனத்திற்கு மருந்து ஒன்று கொடுக்கிறார். மீனா எங்கே என கேட்க அவளுக்கு வேலை செய்ய சொல்லிருக்கேன் என சொல்கிறார். அப்போது தனம் மீனாவிடம் ஏன் வேலை சொன்னீங்க அவளுக்கு அதெல்லாம் பார்த்து பழக்கம் இல்லை என சொல்ல, அதெல்லாம் பழகிக்க வேண்டும் என தனத்தின் அம்மா சொல்கிறார். மீனா அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு வருத்தத்துடன் வர தனமும் அம்மாவும் சந்தோசமாக குழந்தையை கொஞ்சுவதை பார்த்து கடுப்பாகிறார்.

ஹேமா, அஞ்சலியுடன் சந்தோசமாக இருக்கும் கண்ணம்மா, ஹேமா நினைப்பாக இருக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

மூர்த்தி கடையில் குழந்தையை நினைத்து சிரித்துக் கொண்டிருக்க ஜீவா கிண்டல் செய்கிறார். அப்போது கடைக்கு வரும் அனைவரும் மூர்த்தியின் குழந்தை பற்றி கேட்க, மூர்த்தி சந்தோசமாக இருக்கிறார். ஜீவா என்ன அண்ணா இப்படி எல்லாரும் கேக்குறாங்க என கேட்க, ஆமாம் சந்தோஷமாக இருக்கிறது என்னால் இங்கே இருக்கவே முடியவில்லை குழந்தை நினைப்பாகவே இருக்கிறது. குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறானோ என தெரியவில்லை என சொல்கிறார்.

பின் ஜீவா மூர்த்தியை வீட்டிற்கு போங்க என சொல்ல, மூர்த்தி வேண்டாம் என சொல்கிறார். பரவாயில்லை அண்ணா நீங்க போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி அனுப்பி வைக்கிறார். மீனா கயலுக்கு சாப்பாடு ஊட்ட கயல் சாப்பிடாமல் இருக்கிறார். தனம் அக்கா தான் ஊட்டுவாங்க நல்லா சாப்பிடுவாள் ஆனால் இப்போது என்னிடம் சாப்பிடாமல் ஏமாற்றுகிறாள் என மீனா சொல்ல, தனத்தின் அம்மா அவளுக்கு இப்போ குழந்தை வந்துவிட்டது அந்த குழந்தையை அவள் பார்க்க வேண்டும் நீ இனிமேல் கயலை பார்த்துக் கோள் என சொல்ல மீனா வருத்தமாக இருக்கிறார்.

கண்ணம்மாவுடன் ஹேமாவை சேர்க்க திட்டமிடும் அஞ்சலி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அப்போது மூர்த்தி அங்கே வர கயல் என்ன செய்கிறாய் என கேட்டுக் கொண்டிருக்க, தனத்தின் அம்மா தனம் குழந்தையுடன் இருக்கிறாள் நீங்க சென்று பாருங்க என சொல்கிறார். உடனே மீனா கயலிடம் பெரியப்பா உள்ளே தம்பி பாப்பாவை பார்க்க சென்றுவிட்டார் என சொல்கிறார். அப்போது தனத்தின் அம்மா பெரியப்பாவுக்கு இப்போ தம்பி பாப்பா வந்துவிட்டான் அவனை தான் தூக்குவாரு உன்னை தூக்கமாட்டார் என சொல்ல, மீனா அழுகையுடன் அம்மாவிடம் வா என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!