மீனாவின் நிலைமையை புரிய வைத்த தனம், மூர்த்தி எடுத்த நல்ல முடிவு – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மீனாவின் நிலைமையை புரிய வைத்த தனம், மூர்த்தி எடுத்த நல்ல முடிவு - இன்றைய
மீனாவின் நிலைமையை புரிய வைத்த தனம், மூர்த்தி எடுத்த நல்ல முடிவு - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மீனாவின் நிலைமையை புரிய வைத்த தனம், மூர்த்தி எடுத்த நல்ல முடிவு – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா இரவு ரூமிற்கு வந்து மூர்த்தி பேசியதை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார். ஜீவா அண்ணன் பேசியது தவறு தான் ஆனால் அதற்காக நீ பேசியதும் தவறு தான் என சொல்கிறார். பின் தனம் மூர்த்தியிடம் பேசி புரிய வைத்து மீனாவிற்கு பணம் கொடுக்க சம்மதிக்க வைக்கிறார். மூர்த்தி கயலுக்கு புதிதாக திட்டத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கயலுக்கு பால் கொண்டு வர ஜீவா கயலை கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா கோவமாக இருக்க ஜீவா ஏன் கோவமாக இருக்கியா என கேட்கிறார். ஆமாம் என மீனா சொல்ல மாமா பேசியது சரியா என கேட்கிறார். அதற்கு ஜீவா தவறு தான் ஆனால் நீ பேசியதும் சரி இல்லை என சொல்ல அதை ஒப்புக் கொள்ளாமல் மீனா நான் பேசியது சரி தான் என்பது போல பேசுகிறார். பின் ஜீவா அண்ணன் பணம் தராமல் இருந்தது தப்பு தான் ஆனால் நீ முல்லை ஐஸ்வர்யாவை இழுத்தது சரியா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அவருக்கு புரிய வேண்டும் என தான் சொன்னேன் அதில் ஒன்றும் இல்லை என சொல்கிறார். மீனாவிடம் இதற்கு மேல் பேச முடியாது என ஜீவா அமைதியாக இருக்கிறார். பின் தனத்திடம் மூர்த்தி மீனா பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது தனம் மீனா கயலுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசி இருக்கிறாள். நீங்களும் 15000 ரூபாய்க்கு அவளை நம்பாதது போல பேசியதாக சொல்கிறார். அவள் என்னிடம் பணம் வேண்டும் என உரிமையாக கேட்டிருக்கலாம் என சொல்ல அப்போது மீனா அப்படி கேட்கமாட்டாள் என சொல்கிறார்.

பின் கயலுக்கு நான் பணம் சேமிப்பது எல்லாம் அதில் வராதா என மூர்த்தி கேட்க அம்மாவாக அவள் கையில் இருந்து எதாவது செய்ய வேண்டும் என மீனா நினைப்பதாக சொல்கிறார். மறுநாள் காலையில் கண்ணன் வர அப்போது கதிர் பரீட்சை முடிந்துவிட்டது. அதனால் கண்ணன் கடைக்கு வர வேண்டும் என சொல்கிறார். அப்போது கண்ணன் முடியாது என சொல்ல கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார்கள். அப்போது மூர்த்தி வர மீனா டீ குடித்துவிட்டியா என கேட்கிறார். குடித்துவிட்டதாக சொல்ல, அப்போது மூர்த்தி கண்ணனை ஒரு வேஷ்டி துணி எடுத்துக் கொண்டு வர சொல்கிறார்.

மாப்பிள்ளை முன் வித்தியாசமாக நடந்து கொண்ட வெண்பா, பாரதிக்கு வாழ்த்து சொன்ன லட்சுமி – இன்றைய எபிசோட்!

எல்லாரும் மூர்த்தி என்ன செய்ய போகிறார் என தெரியாமல் இருக்க அப்போது மூர்த்தி ஒரு பானையில் துணியை கட்டி உண்டியல் போல செய்கிறார். கண்ணன் அதை பார்த்து கிண்டல் செய்ய தனம் கண்டிக்கிறார். பின் மூர்த்தி இனிமேல் கடை வியாபாரதில் இருந்து கதிர் ஜீவா நான் தினமும் 300 ரூபாய் போடுவோம். இது கயலுக்கு என சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். ஐஸ்வர்யா இப்படி தினமும் போட்டால் மாதம் நிறைய வரும் என சொல்ல குடும்பத்தினர் அனைவரும் சந்தோசப்படுகின்றனர். பாத்திரம் நிறைந்துவிட்டால் என்ன ஆகும் என கேட்க அப்போது அதை மீனா பெயரில் பேங்க்கில் போடலாம் என சொல்கிறார். அதை கேட்டு மீனா சந்தோசப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!