வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்ற முல்லை, கரு இல்லை என சொன்ன டாக்டர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்ற முல்லை, கரு இல்லை என சொன்ன டாக்டர் - இன்றைய
வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்ற முல்லை, கரு இல்லை என சொன்ன டாக்டர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்ற முல்லை, கரு இல்லை என சொன்ன டாக்டர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா போலீஸ் உடன் இருப்பதை பார்த்து ஜீவா மீனா அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது மூர்த்தியும் வர போலீசிடம் சொல்லி கண்ணனை வீட்டிற்குள் வர சொல்கின்றனர். பின் முல்லைக்கு வயிற்று வலி வருகிறது. அதனால் தனம் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்;

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் வெளியே சென்று போலீசில் மாட்டிக் கொள்கின்றனர். அப்போது ஜீவாவிற்கு போன் செய்து வர சொல்ல மீனாவும் அவருடன் வருகிறார், அதை பார்த்து கண்ணன் பதட்டம் அடைகிறார். பின் ஜீவா போலீசிடம் என்ன நடந்தது என கேட்க எங்களை பார்த்துவிட்டு ஓடியதாக சொல்கிறார். ஜீவா ஏன் ஓடினாய் என கேட்க, எனக்கு சின்ன வயதில் இருந்து போலீஸ் என்றாலே பயம் அதனால் தான் ஓடினேன் என சொல்கிறார். பின் ஜீவா இவன் என் தம்பி தான் எதோ தெரியாமல் செய்துவிட்டான் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் உன்னை நேற்றே இரவு வெளியே சுற்ற கூடாது என சொன்னேன் ஏன் கேட்கவில்லை என சொல்ல, மீனா தினமும் இப்படி தான் நடக்கிறதா என கேட்கிறார். அப்போது மூர்த்தி வர கண்ணன் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார் என பயப்படுகிறார்கள். பின் கண்ணன் எதுவும் பேசுவதற்கு முன் மூர்த்தி காலில் விழுகிறார். அப்போது மூர்த்தி எழுந்திரிடா காலை முழுவதும் வீட்டில் சும்மா தான இருக்க அப்போ வெளியே போகாமல் ஏன் இரவு வெளியே போகிறாய் என கேட்டு உள்ளே போக சொல்கிறார்.

மறுபக்கம் கதிர் வீட்டிற்கு வரும் போது முல்லை வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது கதிர் இப்படி நின்று வேலை செய்ய கூடாது என டாக்டர் சொல்லி இருப்பதாக சொல்கிறார். பின் முல்லை துணி தான மடிகிறேன் என சொல்லி உள்ளே வைக்க சொல்கிறார். அப்போது முல்லைக்கு வயிறு வலிக்கிறது. கதிரிடம் வலிப்பதாக சொல்ல அப்போது கதிர் பத்திரமாக இருக்க சொல்கிறார். பின் முல்லை அடுப்படிக்கு சென்று தயிர் இருக்கிறதா என கேட்கிறார். அப்போது தனம் இல்லை என சொல்ல வயிறு வலிப்பதாக சொல்கிறார்.

சக்தி உயிரை காப்பாற்ற போராடும் பாரதி, வெண்பாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் ஷர்மிளா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது தனம் மோர் கொண்டு வர முல்லைக்கு வயிறு வலிக்கிறது. பின் தனம் மருத்துவமனைக்கு போகலாம் என சொல்ல ஐஸ்வர்யாவிடம் ஆட்டோ கூட்டிக் கொண்டு வரலாம் என சொல்கிறார். அப்போது முல்லையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர். டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு முதல் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது என சொல்கிறார். அதை கேட்டு முல்லை வருத்தப்படுகிறார். பின் தனம் ஆறுதல் சொல்ல முல்லையால் முடியவில்லை. வீட்டிற்கு வர மூர்த்தி விடு பார்த்துக் கொள்ளலாம் என ஆறுதல் சொல்கிறார். ஆனால் முல்லையால் முடியாமல் இருக்கிறது. எனக்கு குழந்தை பிறக்கும் என நம்பிக்கையாகஇருந்தேன் என முல்லை சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!