மீண்டும் வெளியே சென்று போலீசில் சிக்கிய கண்ணன், காப்பாற்ற வரும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் எல்லாருக்கும் வடை சுட்டுக் கொடுக்க எல்லாரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். பின் மீனா கடையை மேம்படுத்த கம்ப்யூட்டரில் பல வேலைகளை செய்கிறார். மறுபக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வெளியே சென்று போலீசில் மாட்டிக் கொள்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் வடை சுட்டு கொண்டு வந்து கொடுக்க அதை சாப்பிட்டு மூர்த்தி நன்றாக இருப்பதாக சொல்கிறார். பின் மீனா கடைக்கு மேம்படுத்த ஆன்லைன் மூலமாக பொருள்களை வாங்க கம்ப்யூட்டரில் பல வேலைகளை செய்கிறார். பின் எல்லா பருப்பு பெயர்களையும் ஏற்றிவிட்டேன் என சொல்கிறார். பின் இரவு கண்ணன் செய்த வடையை அவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வடையில் எண்ணெய் இருக்கிறது என சொல்கிறார்களே என கண்ணன் நினைக்கிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது ஐஸ்வர்யா வர கண்ணன் உனக்கு வெளியே எங்கேயும் போக வேண்டுமா என கேட்கிறார். எனக்கு அசதியாக இருக்கிறது அதனால் தூங்க போகிறேன் என சொல்ல அப்போது கண்ணன் வெளியே போவோம் என சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா பணம் எடுத்துக்கிட்டியா என கேட்கிறார். அப்போது கண்ணன் அதெல்லாம் எடுத்தேன் என சொல்ல இருவரும் வெளியே கிளம்புகின்றனர். அப்போது கண்ணன் வண்டி வேண்டாம் நடந்தே போகலாம் என சொல்ல இருவரும் பேசிக் கொண்டே நடக்கலாம் என சொல்கிறார்.
பின் ஐஸ்வர்யா எனக்கு காபி தான் புடிக்கும் என சொல்ல அப்போது கண்ணன் டீ கூட நன்றாக இருக்கும் என சொல்கிறார். அப்போது தூரத்தில் போலீஸ் அதிகாரிகள் வாகன பரிசோதனையில் இருக்கின்றனர். அப்போது கண்ணன் அவர்களை பார்த்து பயப்படுகிறார். பின் ஐஸ்வர்யாவிடம் இந்த பக்கம் வேண்டாம் வேற பக்கம் போவோம் என சொல்ல ஐஸ்வர்யா ஏன் என கேட்கிறார். நம்மை பிடித்துவிட்டால் என்ன செய்வது என கேட்க, அப்போது கண்ணன் பின் பக்கம் திரும்பி ஓடுகிறார்.
போலீஸ் அதிகாரிகள் அவரை பார்த்துவிட ஏன் ஓடுகிறார்கள் என தெரியாமல் அவர்களை துரத்தி சென்று பிடிக்கின்றனர். எதற்காக ஓடினீர்கள் என போலீஸ் கேக்க சும்மா டீ குடிக்க வந்தோம் என சொல்கிறார். இது என்னுடைய கணவர் தான் என ஐஸ்வர்யா சொல்ல அப்பறம் எதற்கு ஓடினீர்கள் என போலீஸ் கேட்கிறார்கள். சும்மா தான் என சொல்ல வண்டியில் ஏறுங்கள் நான் சென்று விடுகிறேன் என சொல்கிறார்கள் பின் வேண்டாம் என கண்ணன் சொல்ல ஒன்னும் சொல்லமாட்டார்கள் என ஐஸ்வர்யா சொல்கிறார்கள். இருவரும் வண்டியில் எற வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். பின் வீட்டில் யாரையாவது வர சொல்லுங்கள் என சொல்ல ஜீவாவிற்கு கண்ணன் போன் செய்கிறார். அப்போது மீனாவும் எழுந்துவிட இருவரும் வருவதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.