வீட்டை விற்க முடிவு செய்த குடும்பம், மீனாவின் அப்பாவிற்கு நெஞ்சுவலி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், புது வீடு வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனாவின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என மீனாவின் அம்மா போன் செய்கிறார். பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்கே ஜீவாவும் மீனாவும் வந்து பார்த்துக் கொள்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், புது வீடு பற்றி மூர்த்தியிடம் பேசி விட்டதை நினைத்து தனம் வருத்தத்துடன் இருக்க, ஆனால் மூர்த்தி வீடு என்று இருந்தால் எல்லாம் தேவை தான் படும் என சொல்கிறார். பின் ஜீவா கதிரிடம் பெண்கள் சொன்னது எல்லாத்தையும் சொல்கின்றனர். பின் ஜீவாவும் கதிரும் அதை கேட்டு நக்கல் அடித்து சிரிக்கின்றனர். மறுநாள் ஜனார்த்தனன் எழுந்திரிக்க, அவருக்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது. அதனால் அவர் கலை என கத்திக்கொண்டே விழுகிறார். பின் தனம் கதிர் மறுநாள் காலையில் எழுந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பாரதியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணையம் வைத்த கண்ணம்மா, கடுப்பில் வெண்பா – இன்றைய எபிசோட்!
அப்போது ஜீவா சீக்கரம் கடைக்கு போக வேண்டும் என கிளம்புகிறார். அப்போது மீனாவின் போன் அடிக்க ஜீவா யார் என பார்க்க சொல்கிறார். ஆனால் மீனா நீ இங்கே தானா இருக்க அப்பறம் யார் எனக்கு போன் செய்ய போகிறார் என கேட்கிறார். மீண்டும் போன் அடிக்க, முல்லை சென்று போனை எடுத்து வருகிறார். அப்போது மீனாவின் அம்மா போன் செய்ய பதட்டமாக பேசுகிறார். என்னாச்சு அம்மா என கேட்க, அப்பாவிற்கு காலையில் ஒரு மாதிரி இருப்பதாக சொன்னார். அதனால் நான் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கேன் நீ வரியா என கேட்கிறார்.
ஜீவாவும் மீனாவும் மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்கின்றனர். அங்கே என்னாச்சு என தெரியாமல் இருக்கின்றனர். பின் கண்ணனும் ஐஸ்வர்யாவும் கிண்டல் செய்து கொண்டிருக்க யாரோ வந்து கூப்பிடுகின்றனர். யார் என ஐஸ்வர்யா சென்று பார்க்க வீடு விற்கப்படுகிறது என கேள்வி பட்டேன் என சொல்கிறார். பின் கண்ணனை வீட்டை சுற்றி பார்க்க சொல்கின்றனர். பின் ஜனார்தனனை பரிசோதித்து டாக்டர் அவருக்கு லேசான நெஞ்சுவலி என சொல்கிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி உதவித்தொகைக்கு மார்ச் 31 கடைசி நாள்!
டாக்டர் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் அதன் பின் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என சொல்கிறார்.மறுபக்கம் வீட்டை பார்த்த அவர் எவ்வளவு பணம் வேண்டும் என கேட்க, நீங்க எவ்வளவு கொடுப்பீங்க என கேட்கிறார் ஐஸ்வர்யா, வீட்டிற்கு மதிப்பு இல்லை இடத்திற்கு மட்டும் தான் மதிப்பு என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் ஜனார்தனனை பார்க்க செல்ல அவர் மயக்கத்தில் இருக்கிறார்.