மீனாவிடம் பணம் வாங்கி கடன் அடைத்த ஜீவா, கோவத்தில் வார்த்தைகளை விட்ட ஜனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி கடன் வாங்கியவர் கடனை திருப்பி கேட்டு வீட்டு வாசலில் தகராறு செய்கிறார். அப்போது ஜீவா மீனாவிடம் பணம் கேட்டு வாங்குகிறார். அதை பார்த்த ஜனார்த்தனன் கோவப்பட்டு மூர்த்தியிடம் ஜீவா மனைவிக்கு டிரீட்மென்ட் பார்க்க வேண்டும் என்றால் அவரே சம்பாரிக்க வேண்டும் என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை டிரீட்மென்ட்காக கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு வீட்டு வாசலில் சத்தம் போடுகிறார். 2நாட்கள் பொறுத்திருங்கள் என சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை இப்பவே பணம் வேண்டும் இல்லையென்றால் நான் வீட்டிற்குள் சென்று சத்தம் போடுவேன் என கடன் கொடுத்தவர் சொல்கிறார். அப்போது ஜீவா உள்ளே சென்று மீனாவிடம் பணம் கேட்கிறார். எந்த பணம் என மீனா கேட்க அன்னைக்கு உன் அப்பா பணம் கொடுத்தார்கள் அதை கொடு என சொல்கிறார். முதலில் மீனா கொடுக்கமாட்டேன் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
ஜீவா மீனாவிடம் கெஞ்சி கேட்கிறார். கடன் கொடுத்தவர் வீட்டு வாசலில் நிற்கிறார். தயவுசெய்து பணத்தை கொடு என ஜீவா கெஞ்சுகிறார். மீனா முடியாது என சொல்ல, நான் 2 நாட்களில் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என சொல்கிறார். மீனா வேறு வழியில்லாமல் பணத்தை கொடுகிறார். ஜீவா ரூமில் இருந்து பணம் கொண்டு செல்வதை ஜனார்த்தனன் பார்க்கிறார். வெளியே வந்த ஜீவா பணத்தை மூர்த்தியிடம் கொடுத்து கொடுக்க சொல்கிறார். மூர்த்தி இது என்ன பணம் என தெரியாமல் இருக்க அதை வாங்கி கொடுக்கிறார்.
பின் கடன் கொடுத்தவர் சென்றுவிட மூர்த்தி பணம் யாருடையது என கேட்கிறார். மீனாவிடம் வாங்கியதாக சொல்ல ஏன் அவரிடம் வாங்கினாய் என மூர்த்தி சத்தம் போடுகிறார். அப்போது மீனாவிடம் அவருடைய அம்மா தனத்திற்கு ஏன் இவ்வளவு விலை கொடுத்து புடவை வாங்கினாய் என கேட்கிறார். அப்போது மீனா அவங்க எனக்கு வாங்கி கொடுத்தார் அதனால் தான் என சொல்ல அப்போது மீனாவிடம் உனக்கு வாங்கி கொடுத்தது குடும்ப பணம் ஆனால் நீ கொடுத்தது உன் பணம் அதை உனக்கும் கயலுக்கும் செலவிற்கு தான் கொடுத்தேன் என சொல்கிறார்.
பின் ஜனார்த்தனன் மாப்பிள்ளை பணம் வாங்கி போனது யாருடைய பணம் என கேட்க, அப்போது மீனா கடன் கொடுத்தவர் வாசலில் நிற்கிறாராம் அதனால் தான் ஜீவா பணம் கேட்டான் 2 நாட்களில் கொடுத்துவிடுவான் என சொல்கிறார். பின் ஜனார்த்தனன் வெளியே சென்று பேச மூர்த்திடம் கடன் கொடுத்தவர் யாரோ வந்தாராம் என கேட்கிறார். ஆமாம் அவசர தேவைக்காக பணம் வாங்கியதாக சொல்ல என்ன அவசரம் வியாபார அவசரமா என கேட்கிறார். இல்லை முல்லை டிரீட்மென்ட்காக வாங்கியது என சொல்ல , அப்போது ஜனார்தனனிற்கு கோவம் வருகிறது. கதிர் கடனை என் மகள் ஏன் அடைக்க வேண்டும் என கேட்கிறார்.
ஜீவா இங்க தனி தனியாக கடன் என யாருக்கும் இல்லை என சொல்ல, கடை கட்ட பணம் கொடுக்கிறேன் என சொன்ன போது வேண்டாம் என சொன்னீங்க இப்போது இவருடைய மனைவி டிரீட்மென்டிற்கு பணம் வாங்கி இருக்கீங்க, இவர் மனைவிக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்றால் இவர் தான் சம்பாரிக்க வேண்டும் இவருக்கு சம்பாரிக்க வக்கு இல்லை என சொல்ல அதை கஸ்தூரி கேட்டுவிடுகிறார். உள்ளே வந்து முல்லை மற்றும் அம்மாவிடம் அது பற்றி சொல்கிறார். அனைவரும் மீனா அப்பா பேசியதை கேட்டு கோபப்படுகிறார்.