மீனா அப்பாவிடம் காசு வாங்க மறுத்த ஜீவா, மூர்த்தியை சந்திக்க திட்டமிடும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மீனா அப்பாவிடம் காசு வாங்க மறுத்த ஜீவா, மூர்த்தியை சந்திக்க திட்டமிடும் மீனா - இன்றைய
மீனா அப்பாவிடம் காசு வாங்க மறுத்த ஜீவா, மூர்த்தியை சந்திக்க திட்டமிடும் மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மீனா அப்பாவிடம் காசு வாங்க மறுத்த ஜீவா, மூர்த்தியை சந்திக்க திட்டமிடும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் மீண்டும் மூர்த்தியின் மருத்துவ செலவிற்காக பணம் கொடுக்கிறேன் என சொல்ல ஜீவா வேண்டாம் என சொல்கிறார். பின் மூர்த்தியை சந்திக்க மீனாவும் ஐஸ்வர்யாவும் திட்டமிடுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா பணம் கட்ட போக அப்போது ஜனார்த்தனன் என்ன மாப்பிள்ளை என கேட்கிறார். அப்போது ஜீவா பில் கட்ட இருப்பதாக சொல்ல ஜனார்த்தனன் நான் கொடுக்கிறேன் என சொல்கிறார். ஆனால் ஜீவா ஏற்கனவே 2 லட்சம் கடன் கொடுத்து இருக்கீங்க இப்போது வேண்டாம் என சொல்ல, உடனே ஜனார்த்தனன் கோபப்படுகிறார். ஜீவா பணம் கட்டிவிட்டு வர மீனாவின் அப்பாவிடம் சாப்பிட்டீங்களா என கேட்கிறார். சாப்பிட்டேன் என சொல்ல அண்ணனை பார்க்கவே இல்லையே என கேட்கிறார்.

பின் ஜீவா அண்ணனை சென்று பாருங்கள் என சொல்ல ஜனார்தனனும் கலையும் சேர்ந்து பார்க்க வருகின்றனர். உடம்பு எப்படி இருக்கிறது என கேட்க அப்போது லேசாக நெஞ்சு வலிக்கிறது என சொல்கிறார். எனக்கும் அப்படி தான் இருந்தது என ஜனார்த்தனன் சொல்கிறார். பின் தனம் இவங்க தான் உங்களுக்கு ஆபரேஷனுக்கு 2 லட்சம் கொடுத்து இருப்பதாக சொல்ல அதை கேட்டு மூர்த்தி பதட்டம் அடைகிறார். என்ன ஜீவா இதெல்லாம் என கேட்க ஜீவா மாப்பிள்ளை பணத்திற்காக இரவு நேரத்தில் பல இடங்களில் கேட்டு கொண்டிருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது தான் கொடுத்தேன் என சொல்ல, என்ன தனம் இதெல்லாம் என மூர்த்தி கேட்கிறார். சொல்வதை கேட்காமல் அவர் கொடுத்துவிட்டார் என சொல்கிறார். பின் மூர்த்தியால் எதுவும் சொல்லமுடியவில்லை. மறுபக்கம் கஸ்தூரி மீனா ஐஸ்வர்யாவிற்கு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். பின் ஜீவா மீனாவிற்கு அண்ணன் கண் விழித்துவிட்டதாக சொல்ல மீனா நாம சென்று பாப்போம் என சொல்கிறார். இன்னும் நீங்க பார்க்கவில்லையா என கஸ்தூரி கேட்க ஆமாம் நாங்க மருத்துவமனை பக்கமே போகவில்லை என மீனா சொல்கிறார்.

பின் ஜீவாவிற்கு போன் செய்து நாங்க மாமாவை பார்க்க வருகிறோம் என சொல்ல ஜீவா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். அப்போது நாளை அண்ணனை வீட்டிற்கு அனுப்பிருவாங்க என சொல்ல, நீங்க எல்லாரும் இல்லாமல் வீடே ஒரு மாதிரி இருக்கிறது. அதனால் நீங்க வாங்க என சொல்கிறார். ஐஸ்வர்யாவிடம் சென்று ஜீவா சொன்னதை மீனா சொல்கிறார். கஸ்தூரி நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்ல ஐஸ்வர்யா இங்கேயே இரு என சொல்கிறார்.

முல்லை வீட்டில் தனியாக இருக்க அவருடைய அம்மா அப்பா மூர்த்தியை பார்த்துவிட்டு வருகின்றனர். அவர்களிடம் மூர்த்தியை பார்த்தீங்களா அவர்கள் பார்க்க விட்டார்களா என கேட்க அப்போ நீங்க பார்க்கவே இல்லையா என பார்வதி கேட்கிறார். நாங்க உள்ளே போகவில்லை வெளியே தான் நின்றோம் என சொல்ல அப்போ ஏன் அங்கே இருந்தீங்க என கேட்கிறார். அக்கா நீங்க வாங்க எல்லாம் சரியாகிவிடும் என சொல்ல, அப்போது இவர் கேட்கவே இல்லை அதனால் நாங்க உள்ளே போகவில்லை என சொல்கிறார்.

விவாகரத்து செய்ய மாட்டேன் என சத்தியம் செய்த பாரதி, கடுப்பான வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

மூர்த்திக்கு நீங்க வந்தது எல்லாம் தாங்க முடியாது எதுவும் சொல்லாமல் இருந்தார் என சொல்ல, அந்த காமாட்சி எங்களிடம் சண்டை போட இருந்தார் ஆனால் தனம் சொல்லி வைத்திருப்பாள் போல என கேட்கிறார். மருத்துவமனையில் வைத்து என்ன பேச முடியும் என முல்லையின் அப்பா சொல்கிறார். மீனாவும் ஐஸ்வர்யாவும் பாண்டியன் கயலை எப்படி பார்த்துக் கொள்கிறார்களோ என கேட்க முல்லையின் அம்மா நீ வீட்டிற்கு சென்று பார்த்துக் கொள்கிறாயா என கேட்கிறார். இத்தனை நாள் நான் தான் அவர்களை வளர்த்தேன் அவர்களை பற்றிய நினைப்பு இல்லாமல் எப்படி இருக்கும் என முல்லை கேட்க பார்வதி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.பின் முல்லைக்கு சாப்பாடு போட்டு ஊட்டிவிடுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!