பார்வதியிடம் சத்தம் போட்ட முல்லை, எந்த பிரச்சனை இன்றி கண் விழித்த மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை வீட்டிற்கு வந்து மூர்த்திக்கு உடம்பு சரியில்லை என சொல்கிறார். பின் எல்லாத்துக்கும் பார்வதி தான் காரணம் என சத்தம் போடுகிறார். பின் மூர்த்தி கண் விழித்துவிட தனம் அவரை பார்க்க வருகிறார். தனம் கதிர் வந்ததாக மூர்த்தியிடம் சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை வீட்டிற்கு வந்து மூர்த்திக்கு உடம்பு சரியில்லாமல் போனது பற்றி பேசுகிறார். பின் எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என்ன என்று விசாரிக்காமல் ஏன் இப்படி எல்லாம் பேசினாய் நான் அமைதியாக இரு என எத்தனை முறை சொன்னேன் ஆனால் கேட்காமல் இருந்துவிட்டாய் என சொல்கிறார். அதை கேட்டு பார்வதி கோவப்பட அப்போ உனக்கு நடந்த எல்லா கேட்டதற்கு நான் தான் காரணம் என சொல்கிறாயா என கேட்கிறார். எனக்கு நடந்த நல்லது கேட்டது எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என முல்லை சொல்கிறார்.
பின் பார்வதி நான் உன் நல்லதுக்கு தான் செய்தேன் என்பது உனக்கு இப்போது புரியாது என சொல்கிறார். பின் மூர்த்தியை பார்க்க அவர்கள் கிளம்பிவிட முல்லையை வீட்டில் சாப்பிட சொல்கிறார். மறுபக்கம் தனம் வீட்டில் இருந்து வர காமாட்சி கையில் என்ன பை என கேட்கிறார். தனம் மீனாவும் ஐஸ்வர்யாவும் சமைத்து கொடுத்தார்கள். வீட்டை எல்லாம் சுத்தம் செய்து வைத்திருந்தார்கள் என சொல்ல பரவாயில்லை இரண்டு மருமகளும் பொறுப்பாக தான் இருப்பதாக காமாட்சி சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அனைவரும் சாப்பிட செல்கின்றனர். தனம் ஜீவாவிடம் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. இன்னும் மாமா கண் விழிக்கவில்லை என கேட்க அப்போது நர்ஸ் வந்து மூர்த்தி கண் விழித்து விட்டதாக சொல்கிறார். தனம் ஜீவா காமாட்சி ஜெகா என அனைவரும் சென்று மூர்த்தியை பார்க்கின்றனர். அப்போது மூர்த்தியை பார்த்து தனம் அழ, அழாதே தனம் நான் அவ்வளவு சீக்கரம் சென்றுவிடுவேன் என நினைச்சியா என கேட்கிறார். தனம் உடனே இப்படி எல்லாம் பேசாதீங்க நான் எவ்வளவு பயந்தேன் என தெரியுமா என கேட்கிறார்.
ஹேமாவை வெளியே அழைத்து சென்ற பாரதி, சௌந்தர்யாவிடம் கெஞ்சிய லட்சுமி – இன்றைய எபிசோட்!
பின் நர்ஸ் யாராவது ஒருவர் மட்டும் உள்ளே இருங்க என சொல்ல, அப்போது தனம் மூர்த்தியுடன் இருக்கிறார். கதிர் வந்தானா என மூர்த்தி கேட்க வந்தான் என தனம் சொல்கிறார். எதாவது பிரச்சனையா என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என தனம் சொல்கிறார். கதிர் மூர்த்தியை வெளியே நின்று பார்க்கிறார். வீட்டில் மீனாவும் ஐஸ்வர்யாவும் கிண்டல் செய்து பேசிக் கொள்கின்றனர். நான் சமைத்த சாப்பாடு தான் நன்றாக இருந்ததாக சொல்ல அதை காக்கா கூட சாப்பிடவில்லை என சொல்கிறார். அப்போது கஸ்தூரி வருகிறார். அவரிடம் மீனா கதிர் வந்து என்ன சொன்னார் என கேட்க அப்போது கதிர் வந்து தனத்திடம் அழுதார். பின் தனம் வீட்டிற்கு வர சொன்ன போது எடுக்க வேண்டிய முடிவை நான் எடுத்துவிட்டேன் என சொன்னதாக சொல்கிறார்.