முல்லை முடிவை மாற்றிக் கொள்ள சொல்லும் கஸ்தூரி, எந்த பிரச்சனையின்றி முடிந்த ஆப்ரேசன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
முல்லை முடிவை மாற்றிக் கொள்ள சொல்லும் கஸ்தூரி, எந்த பிரச்சனையின்றி முடிந்த ஆப்ரேசன் - இன்றைய
முல்லை முடிவை மாற்றிக் கொள்ள சொல்லும் கஸ்தூரி, எந்த பிரச்சனையின்றி முடிந்த ஆப்ரேசன் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
முல்லை முடிவை மாற்றிக் கொள்ள சொல்லும் கஸ்தூரி, எந்த பிரச்சனையின்றி முடிந்த ஆப்ரேசன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் மூர்த்தியை நினைத்து வருத்தத்துடன் இருக்க அப்போது டாக்டர் வந்து எல்லாம் சரியாகி விடும் என சொல்கிறார். அப்போது ஜீவா ஜூஸ் வாங்கி கொண்டு வர கதிரும் ஜூஸ் வாங்கி வருகிறார். பின் கஸ்தூரி முல்லையை அழைத்து முடிவை மாற்றிக் கொள்ளும்படி சொல்கிறார். பின் ஜனார்த்தனன் ஜீவாவை பிரித்து கொண்டு வர திட்டத்தில் இருக்கிறார்

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் மூர்த்தியை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருப்பதால் அதை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது ஜீவா ஜூஸ் வாங்கி கொண்டு வந்து குடிக்க சொல்கிறார். தனம் அதை வாங்கி குடிக்க அப்போது கதிரும் தனத்திற்கு ஜூஸ் வாங்கி வருகிறார். தனம் அதை பார்த்து எதுவும் பேசாமல் இருக்கிறார். கதிர் ஜூஸை வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். பின் முல்லை கதிரை பார்த்து கஸ்தூரி முல்லையை தனியாக அழைத்து பேச வேண்டும் என சொல்கிறார்.

அப்போது அண்ணிக்கு ஒன்று என்றால் ஜூஸ் எல்லாம் வாங்கி கொண்டு வருகிறார். ஆனால் அண்ணி சொல்வதை கேட்காமல் இருக்கிறார் என சொல்கிறார். வீட்டில் சண்டை வந்தது எல்லாரும் பிரச்சனை என சொன்னாலும் கதிர் தம்பி வீட்டை விட்டு சென்றதும் தான மூர்த்திக்கு இப்படி ஆகி இருக்கிறது என சொல்கிறார். அதை கேட்டு முல்லை நீங்களும் இப்படி பேசுறீங்க என கேட்க நான் சொல்லாமல் இருந்தாலும் எல்லாரும் அப்படி தான் நினைக்கிறார்கள் சொந்தங்கள் தான பேசினார்கள் அதற்கு இவ்வளவு வீம்பு ஆகாது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

கதிர் தம்பியால் தான் மூர்த்திக்கு இவ்வளவு பிரச்சனை என சொல்ல நன்றாக யோசித்து பார் உங்களுக்கு தான் இந்த முடிவால் கஷ்டம் என கஸ்தூரி சொல்கிறார். முல்லை இந்த விஷயத்தில் அவர் எடுப்பது தான் முடிவு என சொல்கிறார். கஸ்தூரி உங்க முடிவால் யாருக்கும் எந்த பாதிப்பும் வர கூடாது என சொல்கிறார். பின் டாக்டர் வந்து ஏன் இத்தனை பேர் இருக்கீங்க என கேட்கிறார். ஜீவா எல்லாரும் சொந்தங்கள் என சொல்ல அண்ணன் எப்படி இருக்காங்க என கேட்கிறார். அப்போது டாக்டர் ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்துவிட்டது.

அவருக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை என சொல்கிறார். ஒரு மாதம் ரெஸ்ட் எடுத்துவிட்டு பின் 3 மாதங்களுக்கு எந்த வேலையும் செய்ய கூடாது அதன் பின் கூட கடினமான வேலைகளை செய்ய கூடாது என சொல்கிறார். இத்தனை பேர் இங்கே இருக்காதீங்க என டாக்டர் சொல்கிறார். டாக்டர் பேசிய பின் தனத்திற்கு நிம்மதியாக இருப்பதாக சொல்கிறார். பின் அனைவரும் நிம்மதியாக இருக்க அப்போது மீனாவின் அம்மா மீனாவின் அப்பாவிடம் பேச வருகிறார். உன் முகம் ஏன் வாடி இருக்கிறது என கேட்க டாக்டர் 3 மாசமாக ரெஸ்ட் எடுக்க வேண்டும் என சொன்னதாக சொல்கிறார்.

ரோஹித் வீட்டிற்கு வந்ததை நினைத்து கடுப்பாகும் வெண்பா, பாரதியிடம் கேள்விகளை கேட்ட ஹேமா – இன்றைய எபிசோட்!

மூர்த்தி எழுந்திருக்காமல் இருந்தால் கடையை அடைந்துவிடுவார்களா என மீனாவின் அம்மா கேட்கிறார். அது எப்படி நடக்கும் என கேட்க, கதிர் வெளியே போய்ட்டார், மூர்த்திக்கு முடியவில்லை, கண்ணன் சின்ன பையன் அப்போ நாம மாப்பிள்ளை தான எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்ல நீங்க எல்லா வரவு செலவுகளை மாப்பிள்ளை பெயரில் எழுதி வைத்திருக்கீங்க மாப்பிள்ளை இப்போது எங்க கடை தான் முக்கியம் என சொன்னால் என்ன செய்வது என கேட்கிறார்.

அப்படி எல்லாம் நடக்காது என மீனாவின் அப்பா சொல்கிறார். பின் மீனாவின் அம்மா இருக்கும் சூழ்நிலை பார்த்தால் நடக்காது போல என சொல்ல மீனாவின் அப்பா அதெல்லாம் நடக்காது நீ குழம்பாதே என சொல்கிறார். பின் நர்ஸ் வர அவருக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை என சொல்கிறார். எல்லாரும் இங்கே இருக்காதீங்க என சொல்ல அவர் கண் விழித்தாலும் ஒருத்தர் மட்டும் தான் பார்க்க முடியும் என சொல்கிறார். பின் மீனா டீ போட்டுக் கொண்டிருக்க அப்போது ஐஸ்வர்யா வந்து என்ன அக்கா காலையிலேயே டீ போடுறீங்க என கேட்கிறார்.

அப்போது ஜீவா ஆப்ரேசன் முடிந்து போன் செய்வதாக சொன்னார் என சொல்ல அதனால் தான் டீ போடுகிறேன் என சொல்கிறார். பின் ஜீவா மீனாவிற்கு போன் செய்ய ஆப்ரேசன் முடிந்துவிட்டதா என மீனா கேட்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது அண்ணன் நன்றாக இருப்பதாக சொல்ல மாமா பேசினாரா என கேட்கிறார். ஆனால் ஜீவா அண்ணன் மயக்கத்தில் இருக்கிறார் என சொல்கிறார். பின் காமாட்சி அத்தையிடம் நீ தான் சொன்னியா என கேட்க ஆமாம் என சொல்கிறார். பின் கதிருக்கு சொல்லிடீங்களா என கேட்க எல்லாரும் இங்கே தான் இருக்காங்க என சொல்கிறார். நாங்க மாமாவை பார்க்க வேண்டும் என சொல்ல அங்கே கயலும் பாண்டியனும் இருக்காங்க பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா பேச ஜீவா வேண்டாம் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!