மூர்த்தியிடம் பணம் கேட்கும் கடன் கொடுத்தவர், மீனாவிடம் பணம் கேட்கும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் பிறந்தநாளுக்கு வந்து அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். தனம் அண்ணன் வாங்கி கொடுத்த புடவையை காட்டவில்லை என தனத்தின் அம்மா கோவித்து கொள்கிறார். பின் மூர்த்தியிடம் கடன் கொடுத்தவர் கடன் கேட்டு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா சமைத்த சாப்பாட்டிற்கு குறைவான வாக்குகளே வந்ததால் அவர் கோவமாக இருக்கிறார். அப்போது மீனாவின் அப்பா இந்த வீட்டில் அறிவாளி யார் என்ற போட்டி வைத்தால் நீ தான் வெற்றி பெறுவாய் என சொல்ல ஜீவா அதுவும் சந்தேகம் தான் என சொல்கிறார். அதை கேட்டு மீண்டும் மீனாவிற்கு கோவம் வருகிறது. பின் தனம் அம்மா அண்ணன் அண்ணி பாண்டியனை கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் வர இவன் பிறந்த போது உன்னை போல இருந்தான் இப்போது மூர்த்தி மாபிள்ளை போல இருப்பதாக சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
அப்போது தனம் அம்மா இது அண்ணன் வாங்கி கொடுத்த புடவையா என கேட்க இல்லை இது மீனா வாங்கி கொடுத்தது என சொல்கிறார். அதை கேட்டு தனம் அண்ணனிற்கு முகம் வாடுகிறது. பின் தனம் அம்மா அண்ணன் வாங்கி கொடுத்ததை ஏன் கட்டவில்லை என கேட்க மீனா முதன்முறையாக ஆசையாக வாங்கி கொடுத்து இருக்கிறாள் 5000 ரூபாய் என சொல்ல, ஜெகா வாங்கி கொண்டு வந்தது 10000 ரூபாய் என சொல்கிறார். காலையில் இதை கட்டிவிட்டு மாலை ஜெகா வாங்கி கொடுத்ததை கட்டி இருக்கலாம் என சொல்கிறார்.
பின் முல்லை அப்பா இருக்க ஐஸ்வர்யா அவரிடம் பேசுகிறார். அப்போது முல்லை டீ கொண்டு வர கஸ்தூரி குழந்தை பற்றிய பேச்சை மீண்டும் ஆரம்பிக்கிறார். அப்போது முல்லை சென்னையில் குழந்தை இல்லாததை பெரிய விஷயமாக பார்க்கமாட்றாங்க என சொல்கிறார். நீ இந்த ஊரில் தான இருக்க உனக்கு பெரிய விஷயம் தான் என கஸ்தூரி சொல்ல டாக்டர் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என சொல்லி இருப்பதாக சொல்கிறார். ஆனாலும் கஸ்தூரி அதெல்லாம் அப்படியே விட கூடாது என சொல்ல முல்லை இனி இந்த பேச்சு வேண்டாம் என சொல்கிறார்.
மேடையில் உண்மையை சொல்லும் ஹேமா, வெண்பாவிற்கு வந்த புதிய ஆபத்து – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
மறுபக்கம் மீனா அவர்களது அம்மா அப்பாவை சாப்பிட்டுவிட்டு செல்ல சொல்கிறார். அப்போது மீனா சமைத்து இருக்கீங்களா என கேட்க அக்காக்கு நீங்க வருவது தெரியாது அதனால் சமைக்கவில்லை ஆனால் சாப்பிடாமல் அனுப்பமாட்டார் என சொல்கிறார். பின் மூர்த்தி ஜீவா கதிர் வெளியே அமர்ந்திருக்க அப்போது கண்ணன் வந்து சாப்பாடு வாங்க காசு கேட்கிறார். மூர்த்தி கொடுக்க அப்போது கடன் கொடுத்தவர் வந்து மூர்த்தியிடம் பணம் கொடுக்காமல் ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டதாக கேட்கிறார்.
அப்போது மூர்த்தி பணம் கொடுத்துவிட்டு சென்றேன் என சொல்ல ஆனால் பணம் கொடுக்கவில்லை என சொல்கிறார். அப்போது ஜீவா கடைக்கு போன் செய்து பேச அரிசி கடைக்கு பணம் கொடுத்ததாக சரவணன் சொல்கிறான். எனக்கு இப்போதே பணம் வேண்டும் என கடன் கொடுத்தவர் சத்தம் போட அப்போது மூர்த்தி நாளைக்கு கண்டிப்பாக கொடுக்கிறேன் சத்தம் போடாதீங்க என சொல்கிறார். ஆனால் பணம் வாங்காமல் நான் போகமாட்டேன் என சொல்ல, ஜீவா உள்ளே சென்று மீனாவை தனியாக அழைத்து செல்கிறார்.