கதிர் சென்ற கவலையில் நெஞ்சுவலியால் துடிக்கும் மூர்த்தி, மருத்துவமனையில் அனுமதித்த குடும்பம் – இன்றைய எபிசோட்!

0
கதிர் சென்ற கவலையில் நெஞ்சுவலியால் துடிக்கும் மூர்த்தி, மருத்துவமனையில் அனுமதித்த குடும்பம் - இன்றைய எபிசோட்!
கதிர் சென்ற கவலையில் நெஞ்சுவலியால் துடிக்கும் மூர்த்தி, மருத்துவமனையில் அனுமதித்த குடும்பம் - இன்றைய எபிசோட்!
கதிர் சென்ற கவலையில் நெஞ்சுவலியால் துடிக்கும் மூர்த்தி, மருத்துவமனையில் அனுமதித்த குடும்பம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கதிர் வீட்டை விட்டு சென்றதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் கதிர் முல்லையிடம் நாம எடுத்த முடிவு சரி என சொல்கிறார். கதிர் பிரிவை தாங்க முடியாமல் மூர்த்திக்கு நெஞ்சுவலி வர அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் கதிர் வீட்டை விட்டு சென்றதை நினைத்து உடைந்து போய் அமர்ந்திருக்கிறார். மறுபக்கம் முல்லையின் அம்மா என் குழந்தைக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என நினைத்து அழுகிறார். தனம் முல்லையை பார்த்துக் கொள்கிறேன் அவள் ஆசை தான் முக்கியம் என சொல்லிவிட்டு இப்படி இருக்கிறார் என கேட்க எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என முல்லையின் அப்பா சொல்கிறார். அப்போது அவர்கள் பேசியதை எல்லாம் நீ பார்த்தீங்க ஆனால் மூர்த்தி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என சொல்ல அதை கேட்டு கதிர் கோவப்பட்டு அந்த நிலைமையில் எப்படி பேசுவது என கேட்கிறார்.

இப்போது கூட அண்ணனிற்கு தான் மாப்பிள்ளை ஆதரவாக இருக்கிறார் என முல்லையின் அம்மா கோவித்துக் கொள்கிறார். பின் கதிர் எல்லாரும் பேசிவிட்டு அவர்களது வீட்டிற்கு சென்று விட்டனர். நாம அங்கே தான் இருக்க வேண்டும் ஆனால் இவ்வளவு நடந்த பின் அங்கே இருந்தால் எல்லாரும் தினமும் பேசுவார்கள் என சொல்கிறார். முல்லை அதை கேட்டு கதிருக்கு ஆதரவாக இருக்கிறார். மறுபக்கம் கண்ணன் கதிர் போனதை நினைத்து அழுது கொண்டே இருக்க ஐஸ்வர்யா கதிர் மாமா வந்துவிடுவார் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

உடனே கண்ணன் அண்ணன் போய்விட்டது என சொல்ல லட்சுமி அம்மா போட்டோ முன்னால் நின்று ஏன் அம்மா நம்ம குடும்பத்திற்கு இவ்வளவு கஷ்டம் என பேசுகிறார். மூர்த்தி அதை எல்லாம் பார்த்துவிட்டு இங்கே யாரும் குழந்தை இல்லை எல்லாருக்கும் கல்யாணம் முடிந்துவிட்டது. அவர் அவர் அவருடைய வாழ்க்கையை பார்க்க வேண்டும் என சொல்லிவிட்டு தனத்தை படுக்கலாம் வா என சொல்கிறார். பின் தனம் பாய் எல்லாம் விரித்துவிட மூர்த்தி படுக்க செல்கிறார். அவருக்கு அவர்கள் பேசியது எல்லாமும் கதிர் சொல்லியதை கேட்காமல் வெளியே போனது எல்லாம் நியாபகத்திற்கு வருகிறது.

வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, அடித்து நொறுக்கிய சாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது மூர்த்திக்கு லேசாக நெஞ்சு வலிப்பது போல இருக்கிறது. பின் கண்ணன் ஐஸ்வர்யா அமர்ந்து சோகமாக இருக்க அப்போது மூர்த்திக்கு பயங்கரமாக நெஞ்சு வலிக்கிறது. அதை பார்த்து தனம் என்ன ஆச்சு மாமா என கேட்க மூர்த்தி எழுந்து தண்ணீரை குடிக்க முடியாமல் குடிக்கிறார். அப்போது தனம் ஜீவா கண்ணா என சத்தம் போட கண்ணனிற்கு காதில் விழவில்லை, பின் ஐஸ்வர்யா அக்கா குரல் கேட்பது போல இருப்பதாக சொல்ல கண்ணன் ஜீவா ஓடி வந்து பார்க்கின்றனர். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்கே டாக்டர் பரிசோதனை செய்து பார்க்கிறார். பின் நர்ஸ் வர என்ன ஆச்சு என தனம் கேட்கிறார். நர்ஸ் அவருக்கு நெஞ்சு வலி என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!