கதிர் முல்லையை வீட்டிற்கு அழைக்கும் முருகன், காலில் விழுந்து கெஞ்சிய கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கதிர் முல்லையை வீட்டிற்கு அழைக்கும் முருகன், காலில் விழுந்து கெஞ்சிய கண்ணன் - இன்றைய
கதிர் முல்லையை வீட்டிற்கு அழைக்கும் முருகன், காலில் விழுந்து கெஞ்சிய கண்ணன் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கதிர் முல்லையை வீட்டிற்கு அழைக்கும் முருகன், காலில் விழுந்து கெஞ்சிய கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை இரவாகிவிட்டதால் எங்கே தாங்குவீங்க என முருகன் கேட்கிறார். பின் கண்ணன் வந்து கதிர் காலில் விழுந்து கெஞ்சி வீட்டிற்கு வர சொல்கிறார். ஆனால் கதிர் வரமாட்டேன் என சொல்ல மூர்த்தி அதை கேட்டு வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லையை ரோட்டில் சந்தித்த முருகனும் பார்வதியும் வீட்டிற்கு வர சொல்கின்றனர். உனக்கு அவர்கள் என்ன செய்தார்கள் குழந்தை பிறக்காது என்பதால் பணம் செலவு செய்தார்கள் நீ கர்ப்பமாகி இருந்தால் அது அந்த குடும்பத்தின் வாரிசு தான அதை எல்லாரும் பல முறை சொல்லி காட்டுகிறார்கள் என கேட்கிறார். பின் முல்லை நீ சும்மா இரு என சொல்ல முருகன் கதிரை வீட்டிற்கு வர சொல்கிறார். எது இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என சொல்கிறார்.

அப்போது கண்ணன் கதிரையும் முல்லையும் தேடி வருகின்றனர். கதிரை பார்த்ததும் அண்ணா வீட்டிற்கு வா என சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் கதிர் முடியாது என சொல்ல, என்னை போல நீ தவறான முடிவு எதையும் எடுத்துவிடாதே என சொல்கிறார். குடும்பத்தில் அனைவரும் வருத்தப்படுவார்கள் நீ வா வீட்டிற்கு என சொல்ல, கதிர் இது தான் சரியான முடிவு நீ வீட்டிற்கு செல் என சொல்கிறார். நான் போகமாட்டேன் தயவு செய்து வா அண்ணி நீங்களாவது சொல்லுங்கள் என கண்ணன் அழுது கொண்டே கெஞ்சுகிறார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் கதிர் மனம் மாறவில்லை, முருகன் கதிரிடம் காலையில் பேசலாம் என சொல்ல ஆனாலும் கண்ணன் கேட்கவில்லை. நான் நீ வராமல் வீட்டிற்கு போகமாட்டேன் யாரெல்லாம் எதோ பேசினார்கள் என நீங்க இந்த முடிவு எடுத்தது சரியா என கேட்க, கதிர் எதுவும் பேசாமல் கண்ணனை கட்டி அணைத்து அழுகிறார். கண்ணன் நான் போனதால் குடும்பத்தில் வந்த கஷ்டம் எல்லாம் போதும் இப்போது நீ இல்லாமல் எப்படி வீட்டில் இருக்க முடியும் என கண்ணன் பேச ஆனாலும் கேட்காமல் கதிர் முல்லை கிளம்புகின்றனர்.

தனம் கதிர் வருவாரா என வாசலையே பார்த்துக் கொண்டிருக்க ஆனால் மூர்த்தி அவன் நான் பேசமாட்டேன் என சொல்லி கூட கிளம்பி சென்றிருக்கனே என நினைத்து கண்ணீருடன் இருக்கிறார். பின் தனம் கதிர் கண்டிப்பாக வந்துவிடுவான் என சொல்ல கண்ணன் மட்டும் வருகிறார். கண்ணனிடம் கதிர் எங்கே பின்னால் வருகிறானா என கேட்க இல்லை அண்ணன் வரமாட்டேன் என சொல்லிவிட்டார். அண்ணன் இவர்கள் பேசியதால் இந்த முடிவை எடுக்கவில்லை.

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய சாரதி வெண்பா, ஜோடியை பார்த்து சந்தோசப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

நன்றாக யோசித்து தான் முடிவு செய்து இருக்கிறான். நான் காலில் விழுந்து கெஞ்சி பார்த்துவிட்டேன் ஆனாலும் கூட அண்ணன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என கண்ணன் சொல்கிறார். பின் மூர்த்தி தனம் அவன் இல்லாமல் நாம எப்படி இருப்போம். வந்தவர்கள் பேசியதை வைத்து முடிவு செய்துவிட்டான் நாம எல்லாரும் ஒன்றும் பேசவில்லையே, நம்மை பற்றி ஏன் அவன் நினைக்கவில்லை என அழுது கொண்டே இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!