வாக்குவாதத்தில் முடிந்த சண்டை, மீனா அப்பா அம்மாவை அவமானப்படுத்திய ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கடன் கொடுத்தவருக்கு பணம் கொடுத்ததால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை வருகிறது.தனத்தை முல்லை அம்மா குறை சொல்ல மீனாவின் அப்பாவும் விடாமல் பேசுகிறார். அதனால் ஜீவா மீனாவின் அப்பாவை அவமானப்படுத்துகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் பணத்தை வாங்கி கொடுத்ததால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை வருகிறது. தனத்தின் நகையை வைத்து தான் இந்த வீட்டை வாங்கியது என சொல்ல அப்போது மீனாவின் அம்மா மீனாவும் பணத்தை கொடுப்பார் என சொல்கிறார். தனம் அம்மா கொடுப்பாள் என சொல்ல அப்போது தனம் நகை எல்லாத்தையும் கொடுத்தாலும் இப்போது வரவு செலவு எல்லாம் அவர் கையில் தான இருக்கிறது என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது ஜெகா என்ன மூர்த்தி என்ன பேசாமல் இருக்கிறாய் என கேட்க அப்போது மூர்த்தி தனம் செய்ததை எல்லாம் ஏன் சொல்லி காட்ட வேண்டும் என கேட்கிறார். பின் கஸ்தூரி இப்போ கஷ்டப்பட்டு இருப்பது முல்லை அவளை ஏன் திட்டுறீங்க என கேட்க தனம் யாரும் முல்லையை பேசவில்லை என சொல்கிறார். மீனாவின் அம்மா தனத்திடம் தான் எல்லா பணமும் இருக்கிறது அவளிடம் தான் கயலிற்கு பணம் கொடுக்க வேண்டும் என சொல்கிறார். பின் கதிர் என்னால் தான் எல்லா பிரச்சனையும் என சொல்ல, ஜீவா மீனா இதற்கு நீ பணம் கொடுக்காமல் இருக்கலாம் என சொல்கிறார்.
அப்போது ஜீவா ஏன் இப்படி பேசுறீங்க என மீனாவின் அப்பா கேட்க அப்போது மீனா அப்பாவை பேசாதே என சொல்கிறார். முல்லை அப்பா எல்லாம் எங்களிடம் பணம் இல்லை என வருத்தப்பட, தனத்தின் அம்மா இவளுக்கு நம்ம கஷ்டம் புரியவில்லையே என சொல்கிறார். மீனாவின் பணத்தில் தான் எல்லாம் நடந்துள்ளது என சொல்ல, ஜீவா அதில் ஒன்றும் நடக்கவில்லை என சொல்கிறார். மீனா அப்பா என் மகளுக்கு தான் பணம் கொடுத்தேன் என சொல்கிறார். தனத்தின் அம்மா இவ்வளவு கடன் வாங்கி ஏன் மருத்துவமனை போக வேண்டும் என கேட்க அப்போது முல்லை என் தப்பு தான் என சொல்கிறார்.
பாரதியிடம் விவாகரத்து பற்றி கேட்ட ஹேமா, சாரதியுடன் வெண்பாவை பழகவிடும் ஷர்மிளா – இன்றைய எபிசோட்!
தனம் வளையலை கண்ணனிடம் கொடுக்க தனத்தின் அம்மா அதை வாங்கி கொள்கிறார். இந்த குடும்பம் ஒற்றுமையாக இருப்பதாக நடிப்பதாக சொல்ல, கண்ணன் நாங்க ஒற்றுமையாக தான் இருந்தோம் என சொல்கிறார். எல்லாம் மீனா அப்பாவால் தான் நடந்தது என சொல்ல, மீனா வாய்யை மூட சொல்கிறார். அப்போது தனத்தின் அம்மா இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்த பின் தான் வளையலை வைப்பேன் என சொல்கிறார். அப்போது ஜீவா எல்லாரும் வாய்யை மூடுங்க என சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா அவங்க எல்லாரும் ஒரு முடிவோடு இருப்பதாக சொல்ல, அப்போது மீனா உன் சித்தி வாய்யை மூடு என ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார்.
அப்போது மீனா அப்பா மாப்பிள்ளையை அழைத்து கொண்டு வா என சொன்னால் கேட்டியா என கேட்க அப்போது ஜீவா நான் கூப்பிட்டதும் வந்துவிடுவேனா என நினைக்கிறார். முல்லை எல்லாரும் அமைதியாக இருங்க என சொல்ல கதிர் நான் பணத்தை கொடுத்துவிடுகிறேன் என சொல்கிறார். உங்களுக்கு ஏது வருமானம் என கேட்க, கொளுந்தன்களுக்கு கல்யாணம் முடிந்தால் தனியாக வருமானம் கொடுக்க வேண்டும் ஆனால் அதை செய்யாமல் எல்லா பணத்தையும் வைத்து கொண்டு பாசம் என சொல்றீங்க என சொல்கிறார்.
கதிர் எல்லாரையும் அமைதியாக இருக்க சொல்ல, ஜீவா உங்க அப்பா அம்மாவை கிளம்ப சொல் என சொல்கிறார். பின் முல்லை அம்மா தனத்தை எல்லாத்துக்கும் இவ ஒருத்தி தான் காரணம் என சொல்கிறார். தனத்தின் அம்மா எல்லா நகையையும் கொடுத்து தான் இந்த வீட்டை எடுத்திருக்கேன். தனம் திருமணம் முடிந்து வரும் போது உங்க மாப்பிள்ளை எல்லாம் சின்ன பசங்க என சொல்கிறார். 15 வருடத்தில் அவ பிறந்த வீட்டிற்கு கூட வந்தது இல்லை என சொல்ல, முல்லை அம்மா அப்போ தான் ஆப்பு வைக்க முடியும் என சொல்கிறார். பின் கயல் பெயரில் போஸ்ட் ஆபிசில் பணம் இருக்கிறது என சொல்ல என் பெயரில் என்ன இருக்கிறது என கேட்கிறார். இந்த குடும்பத்திற்காக 15 வருஷம் குழந்தை வேண்டாம் என இருந்தால் என சொல்ல என்ன நாடகம் போடுறீங்களா என மீனாவின் அப்பா கேட்க ஜீவா சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.