கதிருக்கு ஆதரவாக சண்டை போட்ட பார்வதி, குடும்பத்தில் வந்த பெரிய பிரச்சனை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா பேசியதை கேட்டு மூர்த்திக்கு கோவம் வர வீட்டிற்குள் வந்துவிடுகிறார். பின் கதிரை பேசியதால் கோவப்பட்ட முல்லையின் அப்பா மீனாவின் அப்பாவிடம் சண்டையிடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா மூர்த்தியிடம் இவருக்கு சம்பாரிக்க வக்கு இல்லாமல் இருந்தால் மருத்துவமனைக்கு போகாமல் இருக்க வேண்டும் என சொல்ல, அதை கஸ்தூரி கேட்டுவிட்டு வந்து முல்லை அம்மாவிடம் சொல்லிவிடுகிறார். ஜீவா மீனாவிடம் வாங்கிய பணத்தை நாளைக்கு கண்டிப்பாக கொடுத்துவிடுவேன் என சொல்ல கதிரிடம் ஏன் இப்படி பேசுறீங்க என கேட்கிறார். மூர்த்தியும் மீனாவிடம் கண்டிப்பாக கொடுத்துவிடு என சொல்ல எனக்கு 50000 எல்லாம் பெரிய பணமே இல்லை என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
மூர்த்தி ஏன் என்னிடம் கேட்காமல் பணம் வாங்கினாய் என கேட்க ஜனார்த்தனன் மூர்த்தியை நம்பாமல் இருக்கிறார். நாளை காலையில் பணத்தை கண்டிப்பாக கொடுத்துவிடு என சொல்லி மூர்த்தி உள்ளே செல்கிறார். அப்போது ஜனார்த்தனன் என்ன அவர் நான் பேசுவதை கேட்காமல் உள்ளே போகிறார் என கேட்கிறார். ஜீவா கதிரிடம் மன்னிப்பு கேட்கிறார். மறுபக்கம் தனம் அண்ணன் வாங்கிய சேலையை கட்டி பார்க்கிறார். கஸ்தூரி அவர் பேசியதை எதிர்த்து கேட்க கூட ஆள் இல்லை என சொல்ல முல்லையின் அம்மா நான் கேட்பேன் என சொல்கிறார்.
மாப்பிள்ளையை யாரவது கேட்டால் நான் கேட்பேன் என சொல்கிறார். அவரிடம் பணம் வாங்கவில்லையே என சொல்ல முல்லையின் அம்மா ஜனார்தனனிடம் வக்கு இல்லை என கேட்டீர்களா என கேட்கிறார். அதற்கு மீனாவின் அப்பா ஆமாம் கேட்டேன் என சொல்ல உங்களிடம் பணம் இருந்தால் வைத்து கொள்ளுங்கள் என சொல்கிறார். கஸ்தூரி சத்தத்தை கேட்டு அனைவரும் வருகின்றனர். இவர்கள் சொத்துக்கு வழி இல்லாமல் உங்க வீட்டு வாசலுக்கு வந்தார்களா என கேட்க, தனம் வந்து என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்கிறார். மீனா என்ன ஆச்சு என கேட்க யாரும் சொல்லாமல் இருக்கிறார்.
ஜீவா மீனாவின் அப்பாவை அமைதியாக இருக்க சொல்ல, கஸ்தூரி ஏன் மீனா எதுவும் தெரியாதது போல நடிக்கிறாய் என கேட்கிறார். அப்போது எங்களுக்கு நடிக்க அவசியம் இல்லை என சொல்ல , மூர்த்தி எல்லாரையும் பேசாமல் இருக்க சொல்கிறார். கதிரை வக்கு இல்லை என சொல்ல ஜீவாவை அவன் இவன் என பேசியதை மீனாவின் அம்மா தவறாக நினைக்கிறார். முல்லை அழ நீ எதற்கு அழுகிறாய் என கேட்கிறார். தனம் என்ன ஆச்சு என மீனாவின் அப்பாவிடம் கேட்க நீ எதுவும் தெரியாமல் நடிக்காதே என சொல்கிறார். மீனாவின் அப்பா கதிர் முல்லைக்கு பணம் வாங்கினால் நீங்க தான் அடைக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என சொல்கிறார்.
பின் உங்க கடனை மீனா ஏன் அடைக்க வேண்டும் என கேட்க ஜீவா தான் என்னிடம் கேட்காமல் கொடுத்துவிட்டதாக மூர்த்தி சொல்ல, மூர்த்தி கடன் கொடுத்த பின் சிரித்து கொண்டிருந்ததாக சொல்கிறார். பின் முல்லையின் அம்மா தனத்திடம் என் மகளுக்கு குழந்தை இல்லை என்றால் அப்படியே விடலாம் ஏன் இப்படி அவமானப்பட வேண்டியதாக இருக்கிறது என சொல்ல, தனம் அம்மா இவளிடம் ஏன் பேசுறீங்க என கேட்கிறார். தனம் இவ்வளவு செய்தும் பத்தவில்லை என சொல்ல அப்போது கண்ணன் சாப்பாடு வாங்கி கொண்டு வருகிறார்.
பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு புதிய திட்டம் – வட்டி விகிதம் உயர வாய்ப்பு!
என்ன ஆச்சு என கண்ணன் கேட்க ஐஸ்வர்யா உள்ளே போக சொல்கிறார். பின் அண்ணி பிறந்தநாளுக்கு இப்படி சண்டை தேவையா என கண்ணன் கேட்க, மூர்த்தி மீனாவிடம் பணம் வாங்க வேண்டும் என எங்களுக்கு அவசியம் இல்லை நாளைக்கு கொடுத்துவிடுவோம் என சொல்கிறார். அப்போது தனம் கையில் இருந்த வளையலை கொடுத்து பணம் வாங்கி வர சொல்கிறார். அப்போது மீனாவின் அப்பா என் மாப்பிள்ளையை மரியாதை இல்லாமல் பேசுகிறாய் என கேட்கிறார். அப்போது கண்ணனை அழைக்க ஐஸ்வர்யாவிடம் கண்ணனை பெயர் சொல்லி கூப்பிடலாமே என கேட்கிறார்.
அப்போது கஸ்தூரி அடுத்து உன் நாடகத்தை தொடங்கி கொண்டிருக்க என சொல்ல, முல்லையின் அம்மா பணம் இருக்கு என காட்டுறீங்களா என கேட்கிறார். தனம் இந்த வீட்டிற்கு எவ்வளவு பணம் செலவு செய்து இருப்பாள் அதை எல்லாம் நாங்க கணக்கு கேட்டோமா என சொல்ல, ஜனார்த்தனன் உங்க காசை செய்யவில்லை இந்த வீட்டு காசை தான் செய்ததாக சொல்கிறார். பின் முல்லை கதிர் என்ன பேசுவது என தெரியாமல் இருக்கின்றனர்.