கடை வேலையை கவனிக்க முடியாமல் கஷ்டப்படும் மீனா, முல்லைக்கு ஆதரவாக இருக்கும் முருகன் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மல்லி முல்லை புது தொழிலை கிண்டல் செய்வது போல பேச முல்லை அவர் மீது கோவப்படுகிறார். மறுபக்கம் மீனா கடை வேலையை பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார். பின் முருகன் முல்லை கதிருக்கு ஆதரவாக இருக்கிறார்
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மல்லி பெரிய ஹோட்டலா சின்ன ஹோட்டலா என கேட்க முல்லை அளவிற்கு எல்லாம் இல்லை ஆனால் சிறிய அளவில் மெஸ் போல என சொல்கிறார். உடனே மல்லி கிண்டல் செய்ய முல்லை கோபப்படுகிறார். பின் முல்லை அம்மா ஆள் வைத்து பார்க்க போறீங்களா என கேட்க இல்லை நாங்க தான் பார்க்க போகிறோம் என சொல்கிறார். முல்லை அம்மா அதன் பார்த்தேன் அவர் மட்டும் செய்யாமல் என் மகளை எச்ச தட்டு எடுக்க வைக்க போகிறார் என சொல்ல மல்லி அதான் மதுரை வர சொன்னதாக சொல்கிறார்.
பின் மல்லியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் முல்லை. பின் எங்கே இடம் பார்த்து இருக்கீங்க என கேட்க இன்னும் பார்க்கவில்லை என முல்லை சொல்கிறார். நல்ல இடமாக இருந்தால் நன்றாக ஓடும் என சொல்ல, முல்லை அம்மா பெண்ணிற்கு புத்திமதி சொல்லாமல் இப்படி பேசுறீங்க என சொல்கிறார். மறுபக்கம் மீனா கடையில் வேலை தெரியாமல் இருக்க சரவணன் ஜீவாவை கூப்பிட்டு கொண்டே இருக்கிறார். அதனால் வாடிக்கையாளர் கோபப்படுகிறார்.
அதற்கு நடுவே போன் வர மீனா கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். பின் பொருள் எங்கே என கேட்க மீனாவிற்கு தெரியவில்லை அதனால் கஸ்டமர் திட்டி விட்டு செல்கிறார். பின் மீனா தனம் போல பொருள்களை அடுக்கி வைக்க நினைக்கிறார். பொருள்களை தூக்கி தூக்கி போட ஜீவா அடுக்கி வைக்க சொன்னால் தூக்கி போடுகிறாய் என கேட்கிறார். பின் சரவணன் வந்து சரியான இடத்தில் வைக்க சொல்கிறார். மேலும் அண்ணாச்சி தனம் இருந்தால் 2 ஆள் வேலையை ஒரே நேரத்தில் செய்து இருப்பார் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
மீனா மேலே ஏறி பொருள்களை அடுக்கி வைக்க அப்போது தெரியாமல் கீழே விழுந்துவிடுகிறார். பின் ஜீவா நமக்கு இதெல்லாம் தேவையா வீட்டில் இருக்க முடியாமல் இங்கே வந்து கஷ்டப்படுகிறாய் என கேட்க நான் வேலை பார்க்கவில்லை என நீ பார்த்தியா என மீனா கேட்கிறார். வீட்டில் குழந்தைகளை மட்டும்பார்த்துக் கொள்ளாமல் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்கிறார். மீனா உங்க அண்ணியால் மட்டும் தான் கடை வேலைகளை பார்க்க முடியுமா என கேட்க அதற்கு உடம்பு வளைய வேண்டும் என அண்ணாச்சி சொல்கிறார்.
மறுபக்கம் வீட்டில் ஐஸ்வர்யா இன்று தான் வீடு நன்றாக இருப்பதாக சொல்கிறார். குழந்தைகள் கூட குறும்பே செய்யவில்லை என ஐஸ்வர்யா சொல்ல, கண்ணன் ஆமாம் அண்ணி நேற்று தெருவில் எல்லாரும் கேட்கும் அளவிற்கு சண்டை நடந்தது என சொல்கிறார். பின் தனம் ஐஸ்வர்யாவிடம் மீனாவும் முல்லையும் சண்டையே போட்டதில்லை நீ தான் சண்டை போடுகிறாயா இல்ல அவளுக்கும் உனக்கும் செட் ஆகவில்லையா என கேட்கிறார். பின் மூர்த்தி இப்போது தான் நாம வீட்டில் இருப்பது போல இருப்பதாக சொல்கிறார்.
பாக்கியாவை சுயநலமாக முடிவெடுக்க சொல்லும் எழில், வீட்டிற்கு வந்த பாக்கியா – இன்றைய எபிசோட்!
இனிமேல் நீங்க வீட்டில் இருங்க என ஐஸ்வர்யா சொல்ல அங்கே கடையில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என தனம் சொல்கிறார். பின் கண்ணன் அங்கே ஒரு வேலையும் நடக்காது என சொல்கிறார். பின் மூர்த்தி நான் ஒரு மணி நேரம் சென்று இருக்கிறேன் என சொல்ல தனம் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் முல்லை அவருடைய அப்பாவிற்கு சாப்பாடு கொடுக்க, கதிர் வருகிறார். முல்லைக்கு அப்பா சாப்பிட்டு கொண்டிருக்க ஏன் எதுவும் இல்லாமல் சாப்பிடுறீங்க என கதிர் கேட்கிறார். வேலை விஷயம் என்ன ஆச்சு என கேட்க எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என கதிர் சொல்கிறார்.