கடை வேலைகளை பொறுப்புடன் பார்க்கும் தனம், ஜீவாவை வேலைக்கு வர சொல்லும் ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!

0
கடை வேலைகளை பொறுப்புடன் பார்க்கும் தனம், ஜீவாவை வேலைக்கு வர சொல்லும் ஜனார்த்தனன் - இன்றைய எபிசோட்!
கடை வேலைகளை பொறுப்புடன் பார்க்கும் தனம், ஜீவாவை வேலைக்கு வர சொல்லும் ஜனார்த்தனன் - இன்றைய எபிசோட்!
கடை வேலைகளை பொறுப்புடன் பார்க்கும் தனம், ஜீவாவை வேலைக்கு வர சொல்லும் ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கடைக்கு சென்று எல்லா வேலைகளையும் பொறுப்புடன் பார்க்கிறார். மறுபக்கம் மீனாவின் அப்பா மூர்த்தியிடம் ஜீவா இல்லாமல் வேலை பார்க்க முடியவில்லை என்பது போல பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனாவும் ஐஸ்வர்யாவும் வீட்டில் இருந்து வேலைகளை செய்ய மீனா சமையல் செய்ய சொல்கிறார். பின் ஐஸ்வர்யா நான் சமைப்பதை தான் சாப்பிட வேண்டும் என சொல்கிறார். கண்ணன் எங்கே என மீனா கேட்க வேலை விஷயமாக அவனுடைய நண்பனை சந்திக்க சென்றிருப்பதாக சொல்கிறார். என்ன வேலை என கேட்க எதாவது நல்ல வேலை தேடி கொண்டிருக்கிறான் என ஐஸ்வர்யா சொல்கிறார். மறுபக்கம் தனம் வண்டியில் கடைக்கு செல்கிறார். கடை உள்ளே வந்ததும் தனம் அத்தை மாமா புகைப்படத்தை கும்பிட்டு விட்டு பில் கவுண்டரில் அமருகிறார்.

TN Job “FB  Group” Join Now

ஜீவா தனம் வந்ததை பார்த்து சந்தோசப்படுகிறார். வந்ததும் தனம் எல்லா வேலைகளையும் வேகமாக பார்க்கிறார். அப்போது அண்ணாச்சி வந்து தனத்திடம் மூர்த்தி பற்றி கேட்கிறார். பின் தனம் கடையில் எல்லா வேலைகளையும் பொறுப்புடன் கவனிக்கிறார். பின் மீனாவின் அப்பா வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனாவை பாண்டியனை தூங்க வைக்கிறார். மீனாவிடம் தனம் எங்கே என கேட்க அவங்க கடைக்கு சென்றிருப்பதாக சொல்கிறார்.

மாப்பிள்ளை தான் கடையில் இருக்கிறார் அப்பறம் எதற்கு தனம் சென்று இருக்கிறார் என கேட்கிறார். அப்போது மீனா ஜீவாவால் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது என சொல்ல, அங்கையும் மாப்பிள்ளை இல்லாமல் வேலை செய்ய முடியாவில்லை என சொல்கிறார். மீனா அம்மாவை வர சொல்லுங்கள் என கேட்க மீனா உன் அம்மாவிற்கு அதெல்லாம் பழக்கம் இல்லை மாப்பிள்ளை வந்தால் நன்றாக இருக்கும் என சொல்ல மீனா இங்கையும் அதே நிலைமை தான் என சொல்கிறார். மீனா இன்னைக்கு தான் ஜீவா கடைக்கு சென்று இருக்கிறான்.

இந்த நேரத்தில் ஜீவா வருவது கஷ்டம் என சொல்கிறார். பின் தனம் கடையில் ஸ்டாக் எடுத்து வைப்பது, பில் போடுவது, வாடிக்கையாளர்களுக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்து கொடுப்பது என எல்லா வேலைகளையும் செய்கிறார். வாடிக்கையாளர்கள் இத்தனை நாள் நிற்போம் ஆனால் இப்போது அப்படி எல்லாம் எதுவும் இல்லை எப்படி அருமையாக வேலை பார்க்கிறார். நம்ம வீட்டு பொம்பளைங்களும் இருக்கிறார்களே என பேசிக் கொள்கின்றனர்.

பின் மீனாவின் அப்பா மூர்த்தியை பார்க்க வருகிறார். அவரிடம் உடம்பு எப்படி இருக்கிறது என கேட்க,உடம்பு அலுப்பாக இருக்கிறது என மூர்த்தி சொல்கிறார். என்ன செய்வது எனக்கும் இப்படி தான் இருந்தது ஆனால் நன்றாக சாப்பிட கூடாது, இறைச்சி தான் சாப்பிட கூடாது. எனக்கு இப்போ எல்லாம் பழகிவிட்டது என சொல்கிறார். மாமா என்ன கொடுத்தாலும் சாப்பிடுவார் என சொல்ல அது தான் நல்லது என மீனாவின் அப்பா சொல்கிறார். எனக்கு தான் 55 வயதில் வந்தது ஆனால் உங்களுக்கு 50 வயது கூட ஆகவில்லை ஆனால் இவ்வளவு பிரச்சனை என சொல்கிறார்.

குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

பின் மாப்பிள்ளை இல்லாமல் என்னால் வேலை செய்ய முடியவில்லை என மீனாவின் அப்பா சொல்கிறார். மூர்த்தி அதை கேட்டு எதுவும் சொல்லாமல் இருக்கிறார். மறுபக்கம் தனம் கடையில் இன்னும் முடிக்காத பில் எல்லாம் எடுத்து கொடுக்கிறார். உடனே சரவணனை சென்று பார்க்க சொல்ல பின் தனம் ஜீவாவை சென்று பார்க்க சொல்கிறார். தனம் கடை பொறுப்புகளை எல்லாம் கவனத்துடன் கவனித்து மூர்த்தியின் இடத்தை பிடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!