பணத்தை திருப்பி கொடுத்ததால் கோவப்பட்ட ஜனார்த்தனன், பால் காய்ச்சிய சந்தோஷத்தில் முல்லை – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் ஜனார்தனனிடம் பணத்தை கொடுத்ததால் அவர் வெறுப்படைகிறார். பின் முல்லை கதிருடன் தனியாக வந்ததை நினைத்து மிகவும் சந்தோசப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பாவிடம் வாங்கிய அனைத்து பணத்தையும் தனம் கொடுத்துவிட அதை பார்த்து ஜனார்த்தனன் கோபப்படுகிறார். எதோ கடன்காரனுக்கு பணம் கொடுத்தது போல இருக்கிறது என சொல்ல உறவிற்கு நடுவே பணம் தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என தனம் சொல்கிறார். பின் மீனா கயல் செலவிற்கு கொடுத்த பணம் என சொல்ல ஜீவா அவர்களின் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் மீனாவின் அம்மா தனத்தை இருந்துவிட்டு போக சொல்ல ஆனால் தனம் மாமா தனியாக இருப்பதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பின் மீனாவின் அப்பா பணம் கொடுத்து உதவியதற்கு எப்படி செய்கிறார்கள் என பாரு என கோபப்படுகிறார். மீனாவிற்கு அவர்களும் எதுவும் செய்யமாட்டார்கள் நம்மை செய்யவும் விடவில்லை என சொல்லி கோவப்படுகிறார். பின் முல்லை கதிர் வீட்டிற்கு வருகின்றனர். முல்லை வீட்டை பார்த்து பெரிய வீடாக இருப்பதாக சொல்கிறார். நம்ம வீடு போல இருப்பதாக சொல்ல கதிர் அதை தான் நானும் நினைத்தேன் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
முல்லை கதிர் வீட்டிற்கு வர கதிர் வீடு போதுமா என கேட்கிறார். அதெல்லாம் சமாளிக்கலாம் என சொல்ல நன்றாக காத்து வருகிறது என சொல்கிறார். பின் வாங்கிய பொருள்களை எல்லாம் உள்ளே வைக்கின்றனர். கதிர் வாங்கி வந்த அண்ணன் அண்ணி புகைப்படத்தை மாட்டுகிறார். முல்லை அதை பார்த்து நன்றாக இருப்பதாக சொல்கிறார். வீட்டை சுத்தம் செய்துவிட்டு லட்சுமி அம்மா புகைப்படத்தை வைத்து சாமி கும்பிடுகிறார்கள். பின் அடுப்பெல்லாம் மாட்டி பால் காய்ச்சி சந்தோசப்படுகின்றனர். உனக்கு பிடித்தது போல இருக்க வேண்டும் என தேடி தேடி பார்த்தேன் என சொல்கிறார்.
பின் முல்லையும் கதிரும்வெளியே உட்கார்ந்து பால் குடிக்கின்றனர். மறுபக்கம் மூர்த்தி வீட்டில் இருக்க அவருக்கு போர் அடிப்பதால் கண்ணன் படம் போட்டு விடுகிறார். அப்போது மீனா அடுப்படியில் வேலை இருப்பதாக சொல்ல அடுப்படி சென்று பார்த்தால் அங்கே எல்லாம் அப்படியே கிடக்கிறது. அதை பார்த்து மீனாவிற்கு கோவம் வருகிறது. பின் பாண்டியன் அழ கண்ணன் சத்தம் போட்டு கூப்பிடுகிறார். அழுதால் சமாதானம் செய்ய முடியாத என கேட்க கண்ணன் நீங்க செய்தால் தான் நன்றாக இருக்கும் என சொல்கிறார்.
ஹேமா அம்மா பற்றி கண்ணம்மாவிடம் கேட்ட ஹேமா, ஜானகி அம்மா நிலைமையை சொன்ன பாரதி – இன்றைய எபிசோட்!
மீனா மீண்டும் பாண்டியன் அழுதால் ஆட்டிவிடு என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் கண்ணன் மூர்த்தி மாத்திரை போட வேண்டும் என மீனாவிடம் சென்று சுடுதண்ணீர் கேட்கிறார். அப்போது மீனா கண்ணனை போட சொல்ல கண்ணன் சுடுதண்ணீர் போடுகிறார். அப்போது கயல் அழ மூர்த்தி தூக்க வருகிறார். அப்போது மீனா நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி கிளம்புகிறார். பின் தண்ணீர் கொதிப்பதாக சொல்ல கண்ணன் அதை கவனிக்காமல் இருக்கிறார். பின் சூடாக தண்ணீரை பிடிக்க முடியாமல் இருக்க மீனாவை சென்று கொடுக்க சொல்கிறார் கண்ணன் இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.