புது கடை திறப்பு விழாவிற்கு தயாரான குடும்பத்தினர், தையல் தொடங்கிய முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
புது கடை திறப்பு விழாவிற்கு தயாரான குடும்பத்தினர், தையல் தொடங்கிய முல்லை - இன்றைய
புது கடை திறப்பு விழாவிற்கு தயாரான குடும்பத்தினர், தையல் தொடங்கிய முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
புது கடை திறப்பு விழாவிற்கு தயாரான குடும்பத்தினர், தையல் தொடங்கிய முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது கடை திறப்பு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் குடும்பத்தினர் அனைவரும் அதற்காக தயாராகி வருகின்றனர். முல்லை கடை திறப்பு விழாவிற்கு போடும் ட்ரெஸ்களை தயார் செய்து கொடுக்கிறார்

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தினர் அனைவரும் புது கடை திறப்பு விழாவிற்கு தயாராகி வருகின்றனர். தனம் மீனா முல்லை ஐஸ்வர்யா புது புடவை எடுத்தும் அதற்கு ஜாக்கெட் எதுவும் தைக்கவில்லை. 4 நாட்கள் இப்படியே சென்றுவிட்டது என தனம் சொல்ல, அந்த அக்காவிடம் கொடுத்தால் தைத்து கொடுப்பார் என தனம் சொல்கிறார். அப்போது மீனா அதெல்லாம் சரியாக வராது என சொல்கிறார்கள். அன்று நான் ஒரு புடவைக்கு ஜாக்கெட் தைக்க கொடுத்து அது வீணாக போனது தான் மிச்சம் என சொல்ல சரி அப்போ இருப்பதை போட்டுக் கொள்வோம் என சொல்கிறார்கள்.

கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, அப்பாவிற்கு சட்டை வாங்கிய லட்சுமி – இன்றைய எபிசோட்!

அப்போது ஐஸ்வர்யா நான் சுடிதார் போடுகிறேன் என சொல்ல கடை திறப்பு விழாவிற்கு இப்படி சாதாரண சுடிதார் ஏன் போடுகிறாய் என மீனா சொல்ல, அப்போது முல்லை நான் வேண்டும் என்றால் தைத்து கொடுக்கிறேன் என சொல்கிறார். அதற்கு மெஷின் வேண்டுமே என கேட்க, அது எங்க வீட்டில் இருக்கிறது என முல்லை சொல்கிறார். உங்களுக்கு தைக்க தெரியுமா என மீனா கேட்க, முன்னாடி கத்துக்கிட்டது என முல்லை சொல்கிறார். ஆனால் மீனா அவர் எப்படி தைப்பார் என தெரியாமல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்.

மறுபக்கம் கடையில் பொருள்களை எல்லாம் ஜீவா கதிர் அடுக்கி வைக்க மூர்த்தி எல்லாத்தையும் பார்த்து சந்தோசப்படுகிறார். அப்போது கண்ணன் கடைக்கு வெளியே பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் என பேனர் கட்டி இருக்க அதை எல்லாம் பார்த்து மூர்த்தி அருமையாக இருப்பதாக சொல்கிறார். இதை வீடியோ எடுத்து அண்ணியிடம் காட்ட வேண்டும் என கண்ணன் வீடியோ எடுக்கிறார். பின் பெண்கள் எல்லாரும் அவர்களின் புடவை ஜாக்கெட்களை கொண்டு வந்து வைக்க முல்லை நன்றாக தைப்பாரா என கேட்கிறார். அவர் கிளாஸ் எதுவும் போயிருக்காரா என கேட்க அதெல்லாம் இல்லை சிறு வயதில் கத்துக் கொண்டாராம் என தனம் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ காவ்யாவுடன் இணைந்த ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரலாகும் புகைப்படம்!

பின் ஜீவா வீட்டிற்கு வர தனத்திடம் கடை வீடியோவையோ காட்டுகிறார். அதை பார்த்து தனம் ஆனந்த கண்ணீரில் இருக்க, வீட்டில் அல்வா செய்ததை தனம் கொடுக்கிறார். பின் போஸ்டர் அடிக்க கதிரும் கண்ணனும் கடைக்கு போக கண்ணன் படிக்கும் காலேஜ் பெயரை சொல்ல உடனே அவர் செய்து கொடுக்கிறேன் என சொல்கிறார். பின் கதிர் அதில் என்ன எழுத வேண்டும் என சொல்கிறார். மூர்த்தி கடையில் இருக்க ஜெகா அங்கே வருகிறார். அவர் என்ன எல்லாம் அருமையாக இருப்பதாக சொல்ல, எனக்கு எதாவது வேலை இருக்கிறதா என கேட்கிறார். எல்லாம் தம்பிகள் பார்த்துக் கொண்டார்கள் என மூர்த்தி சொல்ல நானும் எதாவது ஒரு வேலை செய்கிறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!