மூர்த்தியுடன் போராட்டத்தில் அமர்ந்த தனம், கடையை இடிக்க போவதாக சொல்லும் அதிகாரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மூர்த்தியுடன் போராட்டத்தில் அமர்ந்த தனம், கடையை இடிக்க போவதாக சொல்லும் அதிகாரி - இன்றைய
மூர்த்தியுடன் போராட்டத்தில் அமர்ந்த தனம், கடையை இடிக்க போவதாக சொல்லும் அதிகாரி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மூர்த்தியுடன் போராட்டத்தில் அமர்ந்த தனம், கடையை இடிக்க போவதாக சொல்லும் அதிகாரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தியை பார்க்க தனம் குழந்தையுடன் வர மூர்த்தியின் முடிவு சரியானது என நினைத்து தனமும் போராட்டத்தில் உட்காருகிறார். பின் மீனாவின் அப்பா வீட்டிற்கு வந்து மூர்த்தி செய்வது தவறானது நீ அதில் எதுவும் கலந்து கொள்ளாதே என எச்சரிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி கடையை திறக்க வேண்டும் என நினைத்து போராட்டத்தில் இருக்கிறார். அப்போது தனம் குழந்தையுடன் வர ஜெகா நான் தான் கூட்டிக் கொண்டு வந்தேன் என சொல்கிறார். அப்போது தனமும் மூர்த்தியுடன் அமர்ந்து கொள்கிறார். குழந்தையுடன் நீயும் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்க மாமா எடுத்த முடிவு தான் சரியானது என தனம் சொல்கிறார். பின் ஜீவா கதிருக்கு போன் செய்து அண்ணன் கடை வாசலில் இப்படி அமர்ந்து இருப்பதாக சொல்ல தனமும் உடன் இருப்பதாக சொல்கிறார்.

பாரதியை வர வைக்க சௌந்தர்யாவிடம் உதவி கேட்கும் கண்ணம்மா, வெண்பாவிடம் பணம் கேட்டு மிரட்டும் மாயாண்டி – இன்றைய எபிசோட்!

அப்போது கதிர் கண்ணன் வந்து ஏன் அண்ணி நீங்களும் இங்கே இருக்கீங்க என கேட்க, நம்ம கடையை இடிக்க போறாங்களாம் அதனால் மாமா எடுத்த முடிவு தான் சரியானது என சொல்கிறார். மறுபக்கம் மீனாவை பார்க்க அவருடைய அப்பா வருகிறார்.மீனா எதாவது செய்ய முடிந்ததா என கேட்க நானும் முயற்சி செய்து கொண்டிருப்பதாக மீனாவின் அப்பா சொல்கிறார். பின் மூர்த்தி மாமா வாசலில் அமர்ந்து தர்ணாவில் இருக்கிறார் என சொல்ல, தனம் அண்ணியும் உடன் இருப்பதாக சொல்கிறார். அப்போது இதனால் பெரிய பிரச்சனை வரும் என மீனாவின் அப்பா சொல்கிறார்.

நீயும் சென்று அமர்ந்துவிடாதே அப்பறம் என்னுடைய மானமே போய்விடும் என சொல்கிறார். பின் மீனா நான் ஏன் அதெல்லாம் செய்ய போகிறேன் நீங்க எதாவது முயற்சி செய்யுங்கள் என சொல்ல, நான் செய்து கொண்டே தான் இருக்கிறேன் என சொல்கிறார். பின் குழந்தை அழுது கொண்டே இருக்க, கதிர் நம்ம கடையில் இருந்து ஒரு கல்லை கூட எடுக்க முடியாது என சொல்லி கதிர் கண்ணனை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். பின் குழந்தை பயங்கரமாக அழ அங்கே இருப்பவர்கள் இப்படி பச்ச குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி இருக்காங்க ஆனால் உள்ளே இருப்பவர் மனது கல்லா என கேட்கிறார்.

மாநிலம் முழுவதும் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

ஜீவா தனத்தை அழைத்துக் கொண்டு குழந்தைக்கு பால் கொடுக்க ஒரு வழி அமைத்துக் கொடுக்கிறார். குழந்தை பால் ஊட்டிவிட்டு வர அழாமல் இருக்கிறது. நீண்ட நேரமாகியும் வெளியே அமர்ந்து இருக்க உள்ளே இருக்கும் மற்ற அலுவலர்கள் இப்படி குழந்தையை வைத்துக் கொண்டு அமர்ந்து இருக்காங்களே என கேட்கிறார். பின் அவர்களை வெளியே வரவிடாமல் தடுக்க அந்த பெரிய அதிகாரி உங்களை எல்லாம் சும்மா விடமாட்டேன் எப்படி கடையை திறப்பீங்க என பார்க்கிறேன் கடை இருந்தால் தான திறப்பீங்க என சொல்ல தனம் எங்களை ஏற்றிவிட்டு நீங்க போகலாம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!