கடையை சீல் வைக்க காரணத்தை சொன்ன அலுவலர், தர்ணாவில் அமர்ந்த மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி அந்த அலுவலரிடம் சென்று எதனால் இப்படி செய்கிறீர்கள் என கேட்க அவர் உண்மையை சொல்கிறார். பின் மூர்த்தி அலுவலகம் வாசலில் தர்ணா செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா எல்லாரிடமும் உண்மையை சொல்ல இதை ஏன் முன்னாடி என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார். அப்போது நான் இரவு கதிர் மாமாவிடம் சொல்லிவிட்டேன், கண்ணன் வர நேரமாகிவிட்டது. அதனால் தான் நான் இரவு சொன்னேன் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் ஜெகா மூர்த்தியை பார்க்க வேகமாக கிளம்புகிறார். இரண்டு நாட்களாக மூர்த்தி வாசலில் காத்துக் கொண்டிருக்க, அலுவலர் எந்த முடிவும் எடுக்காததால் கோவமாக உள்ளே செல்கிறார்.
பாரதிக்கு போன் செய்த கண்ணம்மா, மாயாண்டியை மாட்டிவிட நினைக்கும் வெண்பா – இன்றைய எபிசோட்!
என்ன தான் பிரச்சனை எதனால் இப்படி செய்கிறீர்கள் என கேட்க, எங்களுக்கு எல்லாம் இந்த கடை தான் என் அப்பா கடையை விட்டுவிட்டு செல்லும் போது எனக்கு சிறிய வயது இப்போது நான் இந்த நிலைமைக்கு வர 42 வயது ஆகிவிட்டது என சொல்கிறார். எங்களுக்கு மொத்த உழைப்பும் உள்ளே இருக்கிறது ஆனால் நீங்க இப்படி செய்வது சரி இல்லை என சொல்கிறார். அப்போது என்ன பிரச்சனை என தெரிந்தால் சொல்லிவிடுவீங்களா என கேட்டு என் மகனை அடிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் என கேட்கிறார். எனக்கு ஓரே மகன் எவனோ ஒருவன் பணத்தை எடுத்ததற்கு அவனை அடிப்பீங்களா என கேட்கிறார்.
கணவரை பிரிந்து வாழும் ‘பிக் பாஸ்’ பிரியங்கா? பயில்வான் ரங்கநாதன் கூறிய ஷாக் தகவல்!
அந்த வீக்கம் எல்லாம் குறைய எத்தனை நாள் ஆனது தெரியுமா அவனை நான் கூட அடித்தது இல்லை என சொல்கிறார். மூர்த்தி காரணத்தை தெரிந்து கொண்டு வெளியே வர அந்த நேரம் ஜெகாவும் வருகிறார். அப்போது ஜெகா உனக்கு விஷயம் தெரியுமா என கேட்க இப்போது தான் தெரியும் என ஜீவா சொல்கிறார். பின் இதை கேஸ் போட்டு தான் பார்க்க முடியும் என ஜீவா சொல்ல கேஸ் எல்லாம் போட்டால் ரொம்ப நாட்கள் ஆகும் என சொல்கிறார். அதுவரை வரும் நஷ்டத்தை எப்படி சமாளிக்க முடியும் என மூர்த்தி கேட்க, உடனே அந்த அலுவலகம் வாசலில் தர்ணா செய்கின்றனர்.
ஜெகா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் எழுந்திருக்கமாட்டேன் என மூர்த்தி அமர, ஜெகா வேகமாக வீட்டிற்கு வருகிறார். வீட்டில் தனத்திடம் நடந்ததை சொல்ல, தனத்தை போன் செய்து பேச சொல்கிறார். ஆனால் தனம் என்னை அங்கே கூட்டிக் கொண்டு போ என சொல்லி கிளம்ப ஜெகா வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் வருகிறார். பின் கதிர் கண்ணன் அந்த பையனின் வீட்டை தேடி அலைய அவன் வீட்டை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் வீடு பூட்டி இருக்க கண்ணன் நான் அந்த அலுவலரிடம் பேசுகிறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.