அப்பாவிடம் உதவி கேட்ட மீனா, அலுவலகத்தில் காத்திருக்கும் மூர்த்தி ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
அப்பாவிடம் உதவி கேட்ட மீனா, அலுவலகத்தில் காத்திருக்கும் மூர்த்தி ஜீவா - இன்றைய
அப்பாவிடம் உதவி கேட்ட மீனா, அலுவலகத்தில் காத்திருக்கும் மூர்த்தி ஜீவா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
அப்பாவிடம் உதவி கேட்ட மீனா, அலுவலகத்தில் காத்திருக்கும் மூர்த்தி ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடைக்கு சரக்கு வந்து இறங்க கதிர் சென்று ஒரு நாள் பொறுத்துக் கொள்ளும்படி சொல்கிறார். பின் மீனா ஜனார்தனத்திடம் சொல்லி அலுவலக ரீதியாக எதாவது உதவி செய்ய முடியுமா என கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கடைக்கு சரக்கு லாரியில் வந்து நிற்க கதிர் இரவு சென்று ஒரு நாள் இங்கே நிறுத்தி வைக்கும்படி சொல்கிறார். பின் அவர் கதிர் நிலைமையை புரிந்துக் கொண்டு சரி என சொல்கிறார். கதிர் அவர்களுக்கு சாப்பிட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். மறுநாள் ஜீவா கதிரை பார்த்து ஏன் இரவெல்லாம் தூங்கவில்லையா என கேட்கிறார். ஆமாம் நாம ஆர்டர் செய்த சரக்கு எல்லாம் நேற்று இரவு வந்தது அதை அங்கையே நிறுத்தி வைக்க சொல்லிருக்கேன் என சொல்கிறார். பின் நேற்று நடந்த பிரச்சனையில் எல்லாத்தையும் மறந்துவிட்டேன் என ஜீவா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் மூர்த்தி கடைக்கு கிளம்பி இருக்க, கதிர் ஜீவா இன்னைக்கு அலுவலகத்தில் பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்கள். மூர்த்தி தனியாக அலுவலகம் செல்வதாக சொல்கிறார். கடையில் நிறைய வேலை இருக்கும் என சொல்ல, கதிர் ஜீவாவை அழைத்துக் கொண்டு போக சொல்கிறார். அப்போது கண்ணன் நான் கடைக்கு போகிறேன் என சொல்லி கிளம்புகிறார். மறுபக்கம் மீனாவிடம் ஜீவா போன் பேசுகிறார் அலுவலகத்தில் தான் இருக்காராம் என சொல்ல, தனம் நேற்று வரை பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தது ஆனால் நமக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை என நினைத்து வருத்தப்படுகிறார்.

மாமா ரொம்ப வருத்தமாக இருக்கார் என தனம் சொல்ல, கதிர் மற்றும் ஜீவாவும் இரவெல்லாம் தூங்கவில்லை என சொல்கிறார். நாங்களும் தூங்கவில்லை என ஐஸ்வர்யா சொல்ல, மீனா நான் என் அப்பாவிடம் பேசுகிறேன் என சொல்கிறார். ஐஸ்வர்யா என் தோழியின் அப்பா தாசில்தாராக இருக்கிறார். அவரிடம் நான் பேச சொல்லவா என கேட்கிறார். வேண்டாம் என் அப்பா பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என மீனா சொல்ல, கதிர் போலீஸ் பிடித்த போது அவர் தான் வெளியே எடுத்தார் என சொல்கிறார்.

வெண்பா வீட்டிற்கு வந்த பாரதி, கண்ணம்மாவின் திட்டம் என்ன? இன்றைய எபிசோட்!

ஐஸ்வர்யா அது என்ன கதை என கேட்க முல்லைக்கு கோவம் வருகிறது. பின் மீனா அவரது அப்பாவிற்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். சரி நான் சென்று பார்க்கிறேன் என மீனாவின் அப்பா சொல்ல, மீனா கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். மூர்த்தியும் ஜீவாவும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்க சீல் வைத்த அலுவலர் வருகிறார். அவரிடம் சென்று மூர்த்தி பேச அவர் கோவப்பட்டு பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!