சேலையை வைத்து சண்டை போடும் ஐஸ்வர்யா மீனா, காது குத்து விழாவிற்கு தயாராகும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!

0
சேலையை வைத்து சண்டை போடும் ஐஸ்வர்யா மீனா, காது குத்து விழாவிற்கு தயாராகும் குடும்பத்தினர் - இன்றைய
சேலையை வைத்து சண்டை போடும் ஐஸ்வர்யா மீனா, காது குத்து விழாவிற்கு தயாராகும் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோட்!
சேலையை வைத்து சண்டை போடும் ஐஸ்வர்யா மீனா, காது குத்து விழாவிற்கு தயாராகும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கயலின் காது குத்து விழாவிற்கு மீனாவும் முல்லையும் சென்று அனைவருக்கும் சேலை எடுத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் ஐஸ்வர்யா மீனாவின் சேலை தான் வேண்டும் என சண்டை போடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஐஸ்வர்யா மீனாவும் தனமும் எங்கே என கேட்க, அவங்க காது குத்து நிகழ்ச்சிக்கு புடவை எடுக்க போயிருக்காங்க என சொல்ல, ஐஸ்வர்யா என்னையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம் என சொல்கிறார். இனிமேல் அவங்க போனால் நீயும் போ என தனம் சொல்கிறார். அப்போது மீனாவும் முல்லையும் வர, ஒரே வெய்யிலாக இருக்கிறது என சொல்கிறார். நான் தான் உங்களை ஆட்டோவில் போக சொன்னேன் ஆனால் நீங்க வண்டியில் போனீங்க என சொல்கிறார்.

பின் தனத்திற்கு வாங்கி கொண்ட சேலையை கொடுக்க நன்றாக இருக்கு மீனா என்னிடம் இந்த கலர் இல்லை என சொல்கிறார். அடுத்து மீனாவிற்கு எடுத்த சேலையை காட்டுகிறார். நன்றாக இருக்கிறது மீனா இந்த கலர் உனக்கு நன்றாக இருக்கும் என தனம் சொல்ல, ஆமாம் அக்கா நான் தேடி தேடி வாங்குனேன் என சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா வந்து தனத்திடம் சேலையை வாங்கி பார்க்கிறார். இந்த சேலை அழகாக இருப்பதாக சொல்ல, இது எனக்கு புடித்த கலர் என எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கிறார்.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த வெண்பா, லக்ஷ்மியை அழைத்து செல்லும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது மீனா இது எனக்கு வாங்கியது என சொல்லி ஐஸ்வர்யாவிற்கு வாங்கியதை காட்டுகிறார். இந்த சேலையும் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் எனக்கு அந்த சேலை தான் மிகவும் பிடித்துள்ளது என சொல்கிறார். இது எனக்கு எடுத்தது சொன்னால் தெரியாதா என கேட்க நீங்க என்னைவிட பெரியவர் தான எனக்கு விட்டுக் கொடுத்தால் என்ன என கேட்கிறார். இப்போ வந்தவ நீ அப்பறம் என்ன இப்படி பேசுற என மீனா கேட்க, கண்ணன் சும்மா இரு ஐசு என சொல்கிறார்.

மீனா கோவித்துக் கொண்டு உள்ளே செல்ல, ஐஸ்வர்யாவிடம் கண்ணன் என்ன இப்படி செய்கிறாய் என கேட்கிறார். சும்மா விளையாட்டுக்கு பண்ணேன் என சொல்கிறார். முல்லை கதிரை பார்க்க கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு செல்கிறார். அங்கே கதிரை பார்த்து காபி கொடுத்துவிட்டு வீட்டில் எல்லாரும் இருந்தும் எனக்கு தனியாக இருப்பது போல இருக்கிறது என சொல்கிறார். அதனால் கதிர் முல்லையை கூட்டிக் கொண்டு சென்று இளநீர் வாங்கி கொடுக்கிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருட்கள்?

இனிமேல் உனக்கு கவலையாக இருந்தால் என்னிடம் சொல்லு நாம குன்னக்குடி முழுவதையும் சுற்றி பார்க்கலாம் என சொல்கிறார். பின் கயல் காது குத்து நாளை இருப்பதால் கார் சொல்லியாச்சா என கேட்கிறார். சொல்லிட்டேன் என கதிர் சொல்ல, நாளையில் இருந்து கயலுக்கு இப்படி குடும்பி போட முடியாது. இந்த பிஞ்சு காதில் குத்த போறாங்க என வருத்தப்பட, அதெல்லாம் கொஞ்ச நேரம் தான் வலிக்கும் என தனம் சொல்கிறார். பின் முல்லை கதிரை கிண்டல் செய்ய இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!