பாண்டியனுக்கு பால் கொடுத்த மீனா, குடும்பத்தை நினைத்து சந்தோஷத்தில் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
பாண்டியனுக்கு பால் கொடுத்த மீனா, குடும்பத்தை நினைத்து சந்தோஷத்தில் தனம் - இன்றைய
பாண்டியனுக்கு பால் கொடுத்த மீனா, குடும்பத்தை நினைத்து சந்தோஷத்தில் தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
பாண்டியனுக்கு பால் கொடுத்த மீனா, குடும்பத்தை நினைத்து சந்தோஷத்தில் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் மருத்துவமனை சென்றுவிட்டு வர நேரமாகி விட மீனா பாண்டியனுக்கு பால் கொடுக்கிறார். அதை பார்த்து தனம் சந்தோசப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கயலை குளிக்க வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க மீனா உனக்கு தனம் அக்கா பையன் தான ரொம்ப பிடிக்கும் என சொல்கிறார். அப்படி எல்லாம் இல்லை கயல் பாப்பா வந்து ரொம்ப நாள் ஆகிறது ஆனால் பாண்டியன் இப்போது தான வந்தான் அதனால் தான் என சொல்ல, மீனா அப்போ பெரிய பொண்ணா ஆனால் கொஞ்சமாட்டா என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா முதல் குழந்தை வந்ததும் இரண்டாவது குழந்தைக்கு பொறாமை வருமாம் ஆனால் நீங்க இவ்வளவு பெரிய குழந்தையாக இருக்கீங்க என சொல்ல, இப்படி எல்லாம் இனிமேல் என்னிடம் பேசாதே என மீனா சொல்கிறார்.

கண்ணம்மாவுடன் நெருக்கமாக வரும் பாரதி, மீண்டும் தடுத்த மனசாட்சி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பின் முல்லை தனத்தின் குழந்தையை பார்த்துக் கொண்டிருக்க, அவன் அழ தொடங்கிவிடுகிறார். என்ன சமாதானம் செய்தும் அழுகையை நிறுத்தவில்லை ஐஸ்வர்யா வந்து அழுகையை நிறுத்த முயற்சி செய்கிறார். ஆனால் அழுகையை குழந்தை நிறுத்தவில்லை. கண்ணன் தூக்கி சமாதானம் செய்ய அப்போது கூட அழுவதை நிறுத்தவில்லை. அதனால் முல்லை குழந்தையை தொட்டிலில் போட அவன் அழுது கொண்டே இருக்கிறான். அப்போது முல்லை போன் செய்து தனத்தை வர சொல்ல, இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடுவேன் என சொல்கிறார்.

குழந்தை அழும் சத்தம் கேட்டு வந்த மீனா அவனை எப்படி சமாதானம் செய்கிறேன் என்று பாருங்கள் குழந்தை அழுதால் அம்மாவிற்கு தான் சமாதானம் செய்ய தெரியும் என தூக்கிக் கொண்டு செல்கிறார். அதை கேட்டு முல்லை வருத்தப்படுகிறார். தனம் வேகமாக வந்து பார்க்க இவ்வளவு நேரம் அழுதான் இப்போது தான் சமாதானம் செய்திருக்கு என சொல்கிறார். அவன் எங்கே என கேட்க மீனா ரூமில் இருப்பதாக சொல்கிறார். தனம் மீனா ரூம் சென்று பார்க்க அங்கே குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – பொதுமக்கள் அச்சம்!

அதை பார்த்து தனம் நெகிழ்ச்சி அடைகிறார். அழுது கொண்டே இருந்தான் இவனுக்கு புட்டி பால் கொடுத்து பழக்கம் இல்லையே அதுனால தான் பால் கொடுத்தேன் என மீனா சொல்கிறார். தனம் பாண்டியனை தூக்கிக் கொண்டு மூர்த்தியிடம் வர, நடந்ததை எல்லாம் சொல்லி சந்தோசப்படுகிறார். இனிமேல் யாராலயும் இந்த குடும்பத்தை பிரிக்க முடியாது என சொல்கிறார். அதை கேட்டு மூர்த்தி சந்தோசப்படுகிறார். பின் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வேலை விட்டு அண்ணன்கள் வருகின்றனர். அப்போது ஐஸ்வர்யா நைட்டி உடன் வருவதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!