கண்ணனை பார்த்து கதறி அழும் ஐஸ்வர்யா, அடிபட்டது தெரிந்து வந்த தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கண்ணனை பார்த்து கதறி அழும் ஐஸ்வர்யா, அடிபட்டது தெரிந்து வந்த தனம் - இன்றைய
கண்ணனை பார்த்து கதறி அழும் ஐஸ்வர்யா, அடிபட்டது தெரிந்து வந்த தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கண்ணனை பார்த்து கதறி அழும் ஐஸ்வர்யா, அடிபட்டது தெரிந்து வந்த தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் உடல் முழுவதும் கட்டுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஜீவா கதிர் அழைத்து வருகின்றனர். பின் தனம் கண்ணனிற்கு அடிபட்டதை கேள்விப்பட்டு கண்ணனை பார்க்க வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை காணாமல் ஐஸ்வர்யா அழுது கொண்டிருக்க, ரூமிற்குள் முல்லை வருகிறார். அப்போது கதிர் போன் செய்ய கண்ணனிற்கு அடிபட்டுள்ளது. ஆனால் நீ வீட்டில் யாரிடமும் சொல்லாதே கண்ணனை பார்த்துவிட்டார்களாம் வர கொஞ்சம் நேரமாகிவிடும் என சொன்னதாக சொல்ல சொல்கிறார். அப்போது முல்லை வெளியே வர மாமா என்ன சொன்னாங்க என கேட்கிறார். கண்ணனை பார்த்துவிடங்களாம் என சொல்ல, அப்போது தான் அனைவர்க்கும் நிம்மதியாக இருக்கிறது.

பின் ஐஸ்வர்யா கண்ணனை பார்க்க காத்துக் கொண்டிருக்க, அப்போது ஆட்டோ வருகிறது. அதில் கதிர் வந்து இறங்க கண்ணன் எங்கே என கேட்கிறார். பின் ஆட்டோவில் கண்ணன் கட்டுடன் இருப்பதை பார்த்து ஐஸ்வர்யா அழுகிறார். என்னாச்சு என கேட்க கை தாங்களாக வீட்டிற்குள் கூட்டிக் கொண்டு வருகின்றனர். மூர்த்தி மீனா கண்ணன் அடிபட்டு இருப்பதை பார்த்து பதட்டம் அடைகின்றனர். என்னாச்சு என மூர்த்தி கேட்க, ஜீவா நடந்தது எல்லாத்தையும் சொல்கிறார்.

பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் பாரதி, சௌந்தர்யாவிடம் சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

மூர்த்தி கதிரை பார்த்து சும்மா இருக்காமல் அந்த பையனை ஏன் அடிக்கிறாய் இப்போது எவ்வளவு பெரிய பிரச்சனையில் கொண்டு சென்று விட்டுள்ளது. இதை இதோடு விட்டுரு மீண்டும் போய் அவனை அடித்து பிரச்சனையை அதிகப்படுத்ததே என சொல்கிறார். மறுபக்கம் தனம் குழந்தையுடன் இருக்க, அம்மாவிடம் பிடித்த உணவை செய்து தரும்படி சொல்கிறார். அப்போது ஜெகா வர உங்க வீட்டில் இருந்து எதாவது போன் வந்ததா என கேட்கிறார். இல்லையே என்ன நடந்தது என கேட்க, அம்மா ரிப்போர்ட் வாங்க மருத்துவமனைக்கு சென்றேன்.

அங்கே ஜீவா கதிர் கண்ணனை கை தாங்களாக கூட்டி சென்றனர். அவனுக்கு உடம்பெல்லாம் கட்டு போட்டு இருந்தது என சொல்ல, பதறிப்போன தனம் இப்பவே சென்று பார்க்க வேண்டும் என சொல்கிறார். வந்து ஒரே நாளில் கிளம்புகிறாய் ஜெகா நீ சொல்லாமல் இருக்கலாம் என தனம் அம்மா சொல்ல, அதை எல்லாம் கேட்காமல் தனம் கிளம்புகிறார். கண்ணன் வீட்டில் அனைவரிடமும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தனம் வருகிறார். கண்ணன் அடிபட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்னாச்சு என கேட்க, ஜீவா கடை பையன் அடித்துவிட்டான் என சொல்கிறார்.

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு – முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்!

தனம் கதிரை சத்தம் போட மூர்த்தி வருகிறார். யாரும் என்னிடம் சொல்லாமல் மறைத்துவிடீங்க என தனம் கோவப்பட முல்லை மீனா நீங்களாவது என்னிடம் சொல்லிருக்கலாம் என கேட்கிறார். நான் அந்த வழியாக தான் வரலாம் என இருந்தேன் அப்போது சொல்லாமல் என இருந்தேன் என மூர்த்தி சொல்ல, தனம் கோவமாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!