கண்ணன் மீது தப்பு இல்லை என நிரூபித்த மீனா, மீனாவை பார்த்து பெருமைப்பட்ட ஜீவா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கண்ணன் திருடவில்லை என நிரூபிக்க அவரது அப்பாவிடம் சிசிடிவி ஆதாரங்களை காட்டுகிறார். பின் மீனா பணத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில்,மீனா கண்ணன் தான் பணத்தை எடுத்தான் என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்கிறார். அப்போது பணம் காணாமல் போன அன்று நடந்தது அனைத்தையும் ஜனார்த்தனன் சொல்கிறார். கல்லா சாவி எல்லாம் அந்த ஐஸ்வர்யாவிடம் தான் இருந்தது என சொல்ல, கண்ணன் அப்போது எங்கே இருந்தான் என கேட்கிறார். அவன் எதோ டெலிவரி கொடுக்க போவது போல சென்று அவன் என்னுடன் தான் வெளியே வந்தான் என சொல்ல, அப்போ பணம் திருடு போகும்போது கண்ணன் இங்கையே இல்லை என மீனா சொல்கிறார்.
பின் மேலே சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்த மீனா அதை எல்லாம் பார்த்தீங்களா என கேட்கிறார். அதை எல்லாம் பார்க்கவில்லை ஆனால் எனக்கு தெரியாதா என கேட்கிறார். பின் அந்த வீடியோவையோ காட்டுங்க என சொல்ல, அவர் காட்டுகிறார். அதில் கண்ணன் பணத்தை எடுக்கவில்லை கடை பையன் தான் எடுக்கிறேன் என ஜீவா சொல்ல, அதை பார்த்ததும் ஜனார்தனனிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. கடை பையனை அழைத்து அடித்துவிடுகிறார். நான் கண்ணனை திட்டும் போது அமைதியாக தான இருந்த அப்போ சொல்லிருக்கலாம் அல்லவா என கேட்டு அடிக்கிறார்.
மீனா அவருடைய அப்பாவிடம் 15000 ரூபாய் எடுத்து கொடுக்க சொல்லி அவர் இது எங்க குடும்பத்தின் பணம் என சொல்கிறார். பின் வெளியே வந்து ஜீவா ரொம்ப பெருமையாக இருக்கிறது என கண் கலங்குகிறார். ஜீவா மூர்த்தியிடம் நடந்தது எல்லாம் சொல்ல, மீனாவை பார்த்தால் ரொம்ப பெருமையாக இருந்தது. அவளுக்கு நம்ம குடும்பத்தின் மீது எவ்வளவு பாசம் என கேட்கிறார். தனம் நம்ம மீது பாசமாக இருப்பது வேற ஆனால் மீனா இருப்பது வேற என சொல்கிறார். அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மூர்த்தி ஜீவாவிடம் சொல்கிறார்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் ‘கட்’ – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!
மீனா ஜீவாவிற்கு காபி போட்டு கொடுக்க தனம் அண்ணி வரதுக்குள்ள குடிங்க என சொல்கிறார். ஜீவா நீ போட்ட காபி அண்ணி போட்டதை விட நன்றாக இருக்கிறது என சொல்ல, இப்படி செய்ய ரொம்ப தைரியம் உனக்கு என சொல்கிறார். கதிரிடம் இது பற்றி சொல்ல வேண்டும் என சொல்ல, ஜீவா நீயே சொல்லு என சொல்கிறார்.அப்போது கதிர் வர மீனா சம்மதம் இல்லாமல் பேசுகிறார்.
மீனா உள்ளே சென்று பணத்தை கொண்டுவந்து கொடுக்க, கதிர் அதிர்ச்சி அடைகிறார். இது உங்களுடைய பணம் என சொல்ல, என் அப்பா கடையில் இருந்து பணத்தை வாங்கிவிட்டு வந்துவிட்டேன் என சொல்கிறார். எப்படி என கேட்க, மீனா நடந்ததை சொல்கிறார். அண்ணனிடம் சொல்லிடீங்களா என கதிர் கேட்க அண்ணனிடம் கடையில் சொல்லிவிட்டேன் என சொல்கிறார். மீனா பணத்தை கொடுத்து வாங்கிக்கோங்க என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.