கண்ணனை பற்றி பேச தனத்திடம் கோவப்படும் மூர்த்தி, அண்ணிக்கு ஆதரவாக பேசும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்திற்கு வலி வருவதை பற்றி ஜீவா கவலைப்படுகிறார். உடனே மீனா எனக்கு மட்டும் எதுவும் பண்ணவில்லை என சண்டைபோடுகிறார். பின்னர் ஐஸ்வர்யா கண்ணனுக்கு சமைத்து கொடுக்கிறார். தனம் கண்ணன் பற்றி பேச மூர்த்தி கோபப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்திற்கு குழந்தை பிறந்தால் தொட்டில் வாங்க வேண்டும் என ஜீவா சொல்கிறார். உடனே மீனா பரம்பரை தொட்டில் தான பயன்படுத்த வேண்டும் என மீனா நக்கல் அடிக்கிறார். கயலுக்கு பரம்பரை தொட்டில் தான பயன்படுத்தனும் என மீனா சொல்கிறார். அதெல்லாம் ஜெகா எல்லாம் வாங்கிட்டு வந்துருவான் என தனத்தின் அம்மா சொல்கிறார். பின்னர் அதெல்லாம் வாங்கி கொண்டு வந்தாலும் அத்தை பரம்பரை பொருள்கள் தான் பயன்படுத்த வேண்டும் என சொல்வார் என மீனா சொல்கிறார்.
“நான் தான் லட்சுமியின் அம்மா என்ற” உண்மையை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
என் குழந்தை வேற, கயல் பாப்பா வேற இல்லை என தனம் சொல்கிறார். பார்த்தா அப்படி தெரியவில்லை, என் வலியை விட தனம் அக்கா வலி தானா ஜீவாவிற்கு பெரியதாக உள்ளது என மீனா சொல்கிறார். அப்படி எல்லாம் இல்லை நீங்க வலியில் அழுது கொண்டிருக்கும் போது மாமாவும் வெளியே அழுதார்கள் என முல்லை சொல்கிறார். ஆமாம் என கதிர் சொல்ல, அப்படியா சொல்லவே இல்லை என மீனா சொல்கிறார்.
பின்னர் கண்ணனுக்கு ஐஸ்வர்யா சாப்பாடு சமைத்துக் கொடுக்கிறார். ரசம் சோறு முட்டை வைக்கிறார். கண்ணன் நன்றாக உள்ளது என சொல்லி சாப்பிடுகிறார். நீ இப்படி எல்லாம் சாப்பிட்டிருக்க மாட்ட என ஐஸ்வர்யா சொல்ல, சாப்பாடை விட எனக்கு அண்ணன் அண்ணி எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம் அதான் இப்போ முடியவில்லை என சொல்கிறார். மளிகை ஜாமான் வரை வந்துவிட்டது சீக்கிரமாக சேர்த்துக் கொள்வார்கள் என சொல்கிறார்.
தனது கணவரை பிரிகிறாரா சமந்தா? திருமண உறவில் விரிசல்? ஓபன் டாக்!
பின்னர் மீனா ஜீவா பேசிக் கொண்டிருக்க, தனத்தின் குழந்தைக்கு எதாவது செய்ய வேண்டும் என ஜீவா சொல்கிறார். அதன் பின்னர் மீனா கயலுக்கு எதுவும் செய்யமாட்டா என சொல்கிறார். உடனே கயலுக்கு அண்ணன் சீட்டு போட்டு சேர்த்து வைக்கிறாங்க என சொல்கிறார். மேலும் கயலுக்கு சேர்த்து வைத்திருக்கும் உண்டியலை காட்டுகிறார். பின்னர் தனம் மூர்த்தியிடம் கண்ணன் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறான் என்னவெல்லாம் பொருள்கள் வாங்கி வருகிறான் என பேசிக் கொண்டிருக்கிறார்.
உடனே மூர்த்தி கோவப்பட்டு அவனுக்கும் நமக்கும் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டேன்ல இன்னும் ஏன் அவனை பற்றி பேசுகிறாய் என திட்டுகிறார். அவன் எப்படி போனால் நமக்கு என்ன இனிமேல் உன் உடல்நிலையை பார்த்துக் கொண்டு இரு, அவன் மேல அக்கறை இருந்தால் அங்கே போய் இரு என சொல்கிறார். உடனே கதிர் அங்கே வந்து மூர்த்திக்கு பிடிக்க வேண்டாம் என்றால் காதை மூடிவிட்டு தூங்க செல்லுங்கள் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.