மூர்த்திக்கு தெரியாமல் மளிகை பொருள்களை கண்ணனிற்கு அனுப்பும் ஜீவா, கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் சொன்னபடி ஜீவாவும், கதிரும் சேர்ந்து கண்ணனுக்கு தேவையான பொருள்களை அனுப்பி வைக்கின்றனர். பின்னர் குடும்பத்தினரிடம் தனத்திற்கு 10 நாளில் குழந்தை பிறக்க உள்ளதை சொன்னதும் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனுக்கு தேவையான மளிகை பொருள்களை அனுப்ப முடியுமா என தனம் கேட்கிறார். அண்ணனுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என தனம் சொல்ல, நம்ம வீட்டிற்கு அனுப்பியதாக சொல்லுங்க, நம்ம வீட்டிற்கு அனுப்பினால் அவர் கணக்கு பார்க்கமாட்டார் என சொல்கிறார். அவன் தப்பு பண்ணிருந்தாலும் அவன் பட்டினியாக மட்டும் இருக்க கூடாது என்று தனம் சொல்கிறார்.
மேலும் அந்த பொண்ணுக்கு தேவையான பொருள்களை அனுப்பு என சொல்கிறார். இதை மூர்த்தி மறைந்து நின்று கேட்டாலும் எதுவும் சொல்லாமல் தனத்தை கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார். பின்னர் ஜீவாவும் கதிரும் 1 மாதத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுக்கின்றனர். மேலும் கண்ணன் சாண்டல் பவுடர் தான் போடுவான் என அதையும் வைக்கின்றனர். மேலும் சோப்பு எண்ணெய் என அனைத்தையும் வைத்து கடையில் டெலிவரி செய்யும் பையனிடம் கொடுத்து அனுப்புகின்றனர்.
கொடுக்க சொன்னாங்க மட்டும் சொல்லு வேற எதுவும் பேச வேண்டாம் என சொல்லி அனுப்புகின்றனர். பின்னர் தனமும் மூர்த்தியும் வீட்டிற்கு செல்கின்றனர். மீனாவும் முல்லையும் எப்போது குழந்தை பிறக்கும் என ஆர்வத்தில் இருக்கின்றனர். குழந்தை நன்றாக இருக்காம் என்று சொல்ல இருவரும் நிம்மதியடைகின்றனர். பின்னர் தனத்தின் அம்மா வருகிறார்.
அவர் எப்போது குழந்தை பிறக்கும் என கேட்டதற்கு இன்னும் 10 நாளில் பிறக்குமாம் என சொல்கிறார். சீக்கிரமாக குழந்தை பிறந்தால் ஆண் குழந்தை தான் என சொல்ல, எனக்கும் அதான் சொன்னீங்க ஆனால் பெண் குழந்தை பிறந்தது என்று மீனா சொல்கிறார். பின்னர் லட்சுமி அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்ல போகிறார். அப்போது சோகமாக இருக்கிறார். இந்த விஷயத்தை கேட்டதும் சந்தோஷத்தில் சிரிக்கிறார்.
தமிழக ரேஷனில் உளுந்து & மசாலா பொருட்கள் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!
அதை பார்த்ததும் குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர். பின்னர் எப்போது வேணுமானாலும் குழந்தை பிறக்க தயாராக இருக்க வேண்டும் என லட்சுமி சொல்கிறார். தனத்தின் அம்மா முல்லையை அழைத்து மருத்துவமனைக்கு தேவையான பொருள்களை எடுத்து வைக்க சொல்கிறார். தனம் குழந்தையை நினைத்து சந்தோசப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.