கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு மளிகை பொருள்களை அனுப்ப சொல்லும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மருத்துவமனை செல்லும் போது கண்ணன் ஐஸ்வர்யாவை பார்க்கிறார். வீட்டில் சீக்கரம் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என கண்ணன் சொல்கிறார். பின்னர் ஜீவாவிடம் சொல்லி கண்ணனுக்கு தேவையான மளிகை பொருள்களை வழங்க சொல்கிறார் தனம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கி வரும் போது வழியில் தனம் அவர்களை பார்த்துவிட்டு வண்டியில் இருந்து இறங்குகிறார். மூர்த்தி உடனே கோபத்துடன் வண்டியில் எற சொல்கிறார். இருவரும் அங்கிருந்து கிளம்ப, கண்ணன் வீட்டிற்கு சென்று ஐஸ்வர்யாவிடம் சீக்கிரமாக எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என சொல்கிறார். நீ இப்படி தான் சொல்ற மாமா ஆனால் அந்த வீட்டில் யாருமே உன்னை பற்றி கவலைப்படவில்லை என சொல்கிறார்.
அஞ்சலி வளைகாப்பிற்கு கண்ணம்மாவை அழைக்க சொல்லும் சண்முகம் – பாரதியின் முடிவு என்ன? இன்றைய எபிசோட்!
மூர்த்தி அண்ணன் எவ்வளவு கோவமாக இருக்காங்க, என்னை வேணாம் என்று தலையில் தண்ணி ஊத்திக்கிட்டார். அப்போ எப்படி வீட்டில் இருப்பவர்கள் அதை மீறி எல்லாம் செய்வார்கள் என சொல்கிறார். நீ குடும்பத்தின் மேலே எவ்வளவு பாசமாக இருக்கிற, ஆனால் அந்த குடும்பத்தில் என்னால வாழ முடியவில்லை என சொல்கிறார் ஐஸ்வர்யா. பின்னர் தனமும் மூர்த்தியும் மருத்துவமனை செல்கின்றனர். அப்போது அங்கிருந்த குழந்தை புகைப்படங்களை பார்த்து ரசிக்கின்றனர்.
பின்னர் டாக்டரை பார்த்து குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இன்னும் 15 நாட்களுக்குள் குழந்தை பிறந்துவிடும் என சொல்கிறார். அதை கேட்டு தனம் மூர்த்தி சந்தோசப்படுகிறார். பின்னர் மூர்த்தியும் தனமும் குடவுனிற்கு வருகின்றனர். அங்கே ஜீவா கதிர் இருக்கின்றனர். தனம் இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறந்துவிடும் என சொன்னதை சொல்கிறார். அதை கேட்டு இருவரும் சந்தோசப்படுகின்றனர். அப்போது தனம் ஜீவா கதிரிடம் தனியாக பேசி கண்ணனை பார்த்தேன் என்று சொல்கிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று முடிவு நிலையை எட்டியுள்ளது – உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி!
வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு போறான். அவன் இவ்வளவு பொறுப்பாக இருக்கான் என்று சொல்லி சந்தோசப்படுகிறார். மூர்த்திக்கு தெரியமால் பேசி கண்ணன் இருக்கும் இடத்திற்கு 1 மாசத்திற்கு தேவையான மளிகை பொருள்கள் அனுப்ப முடியுமா என கேட்கிறார் தனம். அதெல்லாம் எப்படி முடியும் என கேட்க மாமாக்கு தெரியாமல் கொடுத்துவிடு என சொல்ல எல்லாத்தையும் மூர்த்தி கேட்டுக் கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.