கண்ணன், ஐஸ்வர்யா நிலைமை பார்த்து கண்டுகொள்ளாமல் செல்லும் மூர்த்தி, வருத்தத்தில் லட்சுமி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பிரசாந்த் கண்ணனை அடிக்க போனதை கதிர் தடுக்க வருகிறார். கண்ணன் ஐஸ்வர்யாவின் இந்த நிலையை நினைத்து கவலைப்படுகிறார். கண்ணன் வீட்டு இல்லாமல் இருக்கும் நிலைமையை பார்த்து மூர்த்தி எதுவும் சொல்லாமல் வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பிரசாந்த் கண்ணனை அடிக்க விடாமல் கதிர் தடுக்க வருகிறார். கண்ணன் கதிரின் கையை அண்ணா என்று பிடிக்க அப்படி கூப்பிடாதே என்று கையை உதறிவிடுகிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் உதவிக்கு யாரும் இல்லாமல் கஷ்டத்தில் இருக்கிறார். நீ பிரசாந்தை கல்யாணம் செய்திருக்கலாம் என்று சொல்ல கண்ணனை ஐஸ்வர்யா அடிக்கிறார்.
உன்னிடம் எதுமே இல்லை என்று தெரிந்து தான் உன்னை கல்யாணம் செய்துக் கொண்டேன் என்று ஐஸ்வர்யா சொல்கிறார். பின்னர் மீனாவின் அம்மா அப்பா வீட்டிற்கு வருகின்றனர். கண்ணன் இப்படி செய்வான் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என ஜனார்த்தனன் சொல்கிறார். அவன் பண்ண தப்பிற்கு நீ என்ன செய்வாய் என தனத்திடம் சொல்ல தனம் அவன் என்ன செய்கிறானோ, எவ்வளவு கஷ்டப்படுகிறானோ என்று சொல்லி அழுகிறார்.
பின்னர் கண்ணனும் ஐஸ்வர்யாவும் ரோட்டில் அமர்ந்திருக்க, ஊர் மக்கள் வீட்டை விட்டு வந்து எங்கே செல்வது என்று தெரியாமல் இருக்கின்றனர் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே மூர்த்தியும், கதிரும் வர கண்ணனை நிலைமையை பார்த்து கண்டுக் கொள்ளாமல் செல்கின்றனர். வீட்டிற்கு சென்றதும் ஜீவா மீனா, முல்லையிடம் சொல்லி வருத்தப்படுகிறார். பின்னர் லட்சுமி அம்மாவை எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார். மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு போவோம் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் பேசினாலும் அவர் எதுவும் பதில் சொல்லாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் லேட்டஸ்ட் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!
Iswarya appa thirumbe varamathiri varamthi bannuinkka, kannauikkum Aishwarya veliala erunthu kadai vendum