கண்ணனை நினைத்து வருத்தப்படும் லட்சுமி அம்மா, நண்பனின் உதவியுடன் வீடு எடுக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கண்ணனை நினைத்து வருத்தப்படும் லட்சுமி அம்மா, நண்பனின் உதவியுடன் வீடு எடுக்கும் கண்ணன் - இன்றைய
கண்ணனை நினைத்து வருத்தப்படும் லட்சுமி அம்மா, நண்பனின் உதவியுடன் வீடு எடுக்கும் கண்ணன் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கண்ணனை நினைத்து வருத்தப்படும் லட்சுமி அம்மா, நண்பனின் உதவியுடன் வீடு எடுக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கல்யாணம் செய்ததால் மூர்த்தி வீட்டை விட்டு அனுப்புகிறார். கண்ணன் இப்படி செய்ததை நினைத்து லட்சுமி கதிரிடம் சொல்லி வருத்தப்படுகிறார். கண்ணனின் நண்பன் இருவரும் தங்க வைக்க உதவி செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனையும், ஐஸ்வர்யாவையும் வீட்டை விட்டு மூர்த்தி வெளியே அனுப்புகிறார். அனைவரும் வீட்டிற்குள் சென்று கதவை மூடிவிடுகிறார் மூர்த்தி. பின்னர் கண்ணன் வர மனமில்லாமல் இருக்க ஐஸ்வர்யா அவரை இழுத்து செல்கிறார். லட்சுமி கண்ணன் இருக்கும் ஞாபகத்தில் தன்னை உள்ளே கூட்டிட்டு போகும்படி சொல்கிறார்.

கதிர் உடனே உள்ளே கூட்டிட்டு போகிறார். கதிரிடம் சொல்லி லட்சுமி அழுகிறார். இப்படி செய்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று வருத்தப்படுகிறார். கதிர் அவருக்கு சமாதானம் சொல்ல, கண்ணனும் ஐஸ்வர்யாவும் ரோட்டில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனர். கண்ணனின் நண்பன் பேசி ஒரு வீடு ஏற்பாடு செய்து தருகிறார்.

கண்ணம்மா இரவு முழுவதும் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

தனத்தின் அம்மா தனத்தை நினைத்து வருத்தப்படுகிறார். 15 வருடம் கழித்து குழந்தை வந்துருக்கு ஆனால் அதற்கு ஒரு சந்தோசம் கூட இந்த குடும்பம் தரவில்லை என புலம்புகிறார். தனத்தை சாப்பிட கூப்பிட தனம் வர மறுக்கிறார். தனத்தின் அம்மா எவ்வளவோ எடுத்து சொல்கிறார். தனம் கவலை தாங்க முடியாமல் அழுகிறார். மூர்த்தி அதை பார்த்து வருத்தப்படுகிறார்.

இதுக்கு தான் மாப்பிள்ளை நான் அவளை அன்னைக்கே வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என்று சொன்னேன். வீட்டில் யாருமே சாப்பிடவில்லை. சம்மந்தி அம்மா சாப்பிடவில்லை, கயல் கூட சாப்பிட வில்லை என்று சொல்கிறார். தனத்திடம் உன் குழந்தையை பற்றி உனக்கு நினைப்பே இல்லை அதை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துகிறாய் என்று கேட்கிறார்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

மூர்த்தி தனத்தை எந்திரிக்க சொல்லி, கதிரை அழைத்து வர சொல்கிறார். அனைவரிடமும் அவன் ஒருத்தன் பண்ண தப்பிற்கு வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிடாமல் வருத்தப்பட கூடாது. நம்ம யாரை பற்றி கவலைப்படாமல் அவன் சென்றான். இனிமேல் அவனை பற்றி யாரும் வருத்தப்பட கூடாது. எல்லாரும் போய் முதலில் சாப்பிடுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!