ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்ட தயாராகும் கண்ணன், பின் தொடர்ந்து வரும் பிரசாந்த் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தாலி வாங்க கண்ணனும் அவரது நண்பரும் செல்கின்றனர். பிரசாந்த் எல்லா இடங்களில் தேடி அலைகின்றனர். மேலும் கதிர் மற்றும் ஜீவா கண்ணனை தேடி கண்ணனின் நண்பன் வீட்டிற்கு செல்கிறார். அங்கே காரைக்குடி முருகன் கோவிலில் இருப்பதாக கண்ணனின் நண்பன் தெரிவிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் அவனது நண்பர்களும் தாலி வாங்க காரில் புறப்படுகின்றனர். வெகு தூரம் சென்றும் கடை எதுவும் இல்லை. பிரசாந்த் எல்லா இடங்களிலும் இருவரையும் தேடி அலைகிறார். அப்போது பிரசாந்தின் சித்தி மல்லி போன் செய்து, ஐஸ்வர்யா கண்ணன் பின்னாடி சுத்துனா உனக்கு என்ன அவளிடம் ஒண்ணுமே இல்லை நீ அவ பின்னாடி அலைய வேண்டாம் என தெரிவிக்கிறார்.
அப்படி எல்லாம் விட முடியாது என பிரசாந்த் தெரிவிக்கிறார். கண்ணன் தாலி பூ வாங்கி கொண்டிருக்க, அதனை பிரசாந்த் பார்த்து விடுகிறார். கண்ணனை பின் தொடர்ந்து பிரசாந்த் செல்கிறார். மறுபக்கம் கதிரும், ஜீவாவும் கண்ணனின் நண்பன் சுரேஷ் வீட்டிற்கு செல்கிறார். அங்கே சுரேஷின் அம்மா போன் செய்து எங்கே இருக்க என்று கேட்க நானும் கண்ணன் எல்லாரும் காரைக்குடி முருகன் கோவிலில் இருக்கிறோம் என்று கூறுகிறார்.
நாடு முழுவதும் இதுவரை 48.89 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்!
உடனே ஜீவாவும், கதிரும் முருகன் கோவில் வருகின்றனர். மேலும் பிரசாந்த் வழி தவறி செல்ல எல்லா கோவிலிலும் தேடி அலைகிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் கல்யாணத்திற்கு தயாராக ஐயர் மந்திரங்களை சொல்கிறார். கண்ணன் தாலி கட்ட செல்லும் போது, தனது அண்ணன் பாசமாக பார்த்துக் கொள்வது பற்றியும், அண்ணி பாசமாக இருந்தது பற்றியும் நினைத்து பார்க்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.